b

அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Wednesday 26 September 2012

நாம் தொலைத்த விளையாட்டுக்கள்

நாம் தொலைத்த விளையாட்டுக்கள்





இப்போதுள்ள சிறுவர்களுக்கு விளையாடக்கிடைக்கும் X-BOX, Playstation, GameBoy இவற்றையெல்லாம் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது. அந்த நவீன விளையாட்டு சாதனங்களை இந்தத் தலைமுறை சிறுவர்கள் கையாளும் லாவகம் பிரமிக்க வைக்கிறது. அதே போல் நமது சிறுவயதில் நமக்கு நமது சிறு வயதில் என்ன விளையாடக்கிடைத்தது என்றும் ஆதங்கப்படவும் வைக்கிறது.

ஒளிந்து பிடித்து விளையாடுதல் :-
'சாட் பூட் த்ரீ' என்று சொல்லி ஓவ்வொருவராக விலக்கிவிட்டு கடைசியில் யார் இருக்கிறார்களோ அவர்கள் ஒன்றிலிருந்து பத்துவரை கண்ணை மூடிக்கொண்டு எண்ணவேண்டும். அதற்குள் மற்றவர்கள் ஒளிந்து கொள்ளவேண்டும். பின்பு ஒளிந்து கொண்டவர்களை ஒவ்வொருவராக கண்டு பிடிக்க வேண்டும். ஒளிந்திருப்பவரை ஒவ்வொருவராக கண்டு பிடித்தவுடன் 'ஒன்னீஸ்' 'ரெண்டீஸ்' :-) என்று சொல்லுவார்கள். இந்த விளையாட்டின் பெயரே ஒன்னீஸ் ரெண்டீஸ் என்று சொல்லுவது உண்டு. அனைவரும் கண்டு பிடிக்கப்பட்ட பின் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டவர் பின்பு தொடர வேண்டும். இப்படி போய்கொண்டே இருக்கும்.

பம்பர விளையாட்டு :-
பம்பர விளையாட்டு மிகவும் பிரசித்தமானது, 1,2,3 சொல்லிவிட்டு எல்லோரும் ஒரே சமயத்தில் பம்பரத்தை சுழலவிட்டுவிட்டு சாட்டையால் சுற்றி கையில் எடுக்க வேண்டும். யார் கடைசில் எடுக்கிறார்களோ அவர்களது பம்பரத்தை மண் தரையில் ஒரு வட்டம் போட்டுவிட்டு அதன் உள்ளே இடுவார்கள். அப்புறம் ஒவ்வொருவராக பம்பரத்தை வேகமாக சுழற்றி முதலில் அந்த வட்டத்துக்குள் குத்துமாறு சுழலவிடவேண்டும். வட்டத்துக்குள் குத்தாவிட்டால் அவரது பம்பரமும் வட்டத்துக்குள் வைக்கப்படும். இது ஒரு சுவாரசியமான ஆட்டம். ஆட்டத்தின் முடிவில் தோற்பவரின் பம்பரத்தின் மேல் வெற்றி பெற்றவர்கள் அனைவரும் ஒரு 'ஆக்கர்'(பம்பரத்தின் மேல் ஆணியை வைத்து புள்ளி விழுமாறு ஓங்கி அடிப்பார்கள்) வைப்பார்கள். சில சமயங்களில் பம்பரம் உடைவது கூட உண்டு. சிலசமயம் பெண்களை கவர, பம்பரத்தை சுழற்றி தரையில் படாமலே கையில் எடுப்பதுவும் உண்டு.


கோலி விளையாட்டு :-
சுவற்றின் ஓரத்தில் ஒரு சதுரமாக ஒரு கோடு போட்டுவிட்டு அதற்குள் சில கோலிகளை உருட்டுவார்கள். அதற்குப்பிறகு எதிராளி சொல்லும் கோலியை எறிந்து அடிக்க வேண்டும். இதற்கு சிகரெட் அட்டை, கோலி குண்டு இவற்றை பணயமாக வைத்து ஆடுவது உண்டு. கோலிகுண்டு சிலசமயம் சிலர் பணம் வைத்து ஆடுவதால், வீட்டார்கள் அதை பெரும்பாலும் விளையாட அனுமதிப்பதில்லை.


கிட்டிப்புல்(கில்லி) :-
மிகவும் பிரபலமான ஆட்டம். ஆனால் பல இடங்களில் இதை விளையாடவிட மாட்டார்கள். எனக்கு தெரிந்து நிறைய பேருக்கு கில்லி விளையாட்டால் காயம் ஏற்பட்டிருக்கிறது. ஆட்டம் மிகவும் சுவாரசியமானது. தரையில் நீளவாக்கில் தோண்டிவிட்டு கிட்டிப்புல்லை அதற்கு குறுக்கில் வைக்க வேண்டும், பிறகு கையில் இருக்கும் கோலால் , கிட்டிப்புல்லை வேகமாக அழுத்தம் கொடுத்து நெம்பித் தள்ள வேண்டும். எதிராளிகள் அந்தப்புறம் நின்று கொண்டு இருப்பார்கள். அவர்கள் இதை கீழே விழாமல் பிடித்துவிட்டால் நீங்கள் அவுட்.. பின்பு அவர்கள் முறை. பிடிக்காமல் தூரத்தில் போய் விழுந்தால், நீங்கள் கோலை குறுக்காக வைக்கவேண்டும் .பின்பு அவர்கள் கிட்டிபுல்லை தூக்கி குறி பார்த்து எறிந்து அது கோலில் பட்டால் நீங்கள் அவுட். அவர்கள் எறியும் போது அது கோலில் படாமல் தூரத்தில் போய் விழுந்தால் நீங்கள் ஆட்டத்தை தொடரலாம். ஆட்டம் எப்படியென்றால், நீங்கள் கிட்டிப்புல்லின் சீவியிருக்கும் ஒரு முனையில் அடிக்க வேண்டும், அது எம்பி வரும்போது அதை கோலால் எத்தனை முறை தட்ட முடியுமோ அவ்வளவு புள்ளிகள். அப்படி தட்டிக்கொண்டே குழியிலிருந்து எவ்வளவு தூரம் கொண்டு செல்ல முடியுமோ அவ்வளவு தூரம் கொண்டு செல்ல வேண்டும். ஒரு முறை கூட தட்ட முடியாவிட்டால் அங்கிருந்து குழி இருக்கும் தூரத்தை கையிலிருக்கும் கோலால் அளக்க வேண்டும் எவ்வளவு தூரம் இருக்கிறதோ அவ்வளவு புள்ளிகள். இப்படியே நீங்கள் அவுட் ஆகும் வரை ஆட்டம் தொடரும். ஒரு தெருவில் ஆடும் ஆட்டம் அப்படியே பக்கத்து தெருவிற்கும் போவது உண்டு.


பே பே :-
பள்ளியில் இடைவேளைகளில், சோளத்தட்டையால் எறி பந்து விளையாடுவது உண்டு.


செதுக்கல் :-
புளியங்கொட்டையை ஒரு வட்டத்திற்குள் கொட்டிவிட்டு அதை தட்டையான கல்லால் செதுக்கி வெளியே கொண்டு வந்து விளையாடும் 'செதுக்கு சில்' ரொம்ப பிரபலம்.


பட்டம் விடுதல் :-
ஊருக்கு ஒதுக்குப்புறத்திற்கு சென்று மாஞ்சா தடவி பட்டம் விடுதல் ரொம்ப பிரபலம். பட்டம் விடுவது ஒரு பெரிய கலையாகும். இதில் முக்கியமான ஒன்று சூச்சம் போடுதல் ( இதில் 2 வகை உண்டு மேல் முடிச்சு கீழ் முடிச்சு) இன்னும் நிறைய எழுதலாம் தொடர நினைப்பவர்கள் பின்னுட்டம் இடவும்.


பெண்கள் விளையாட்டு :-
பெண்களெல்லாம் கண்கட்டு விளையாட்டு, பரமபதம், நொண்டி , சொட்டாங்கல்( இது மிகவும் பிரபலமான விளையாட்டு), பல்லாங்குழி இவையெல்லாம் விளையாடுவது உண்டு.


கிச்சு கிச்சு தாம்பளம் :-
நல்ல மணல் விளையாடக்கிடைத்தால் மணலை நீளவாக்கில் குவித்துவிட்டு எதிரெதிராக உட்கார்ந்து கொண்டு சிறு கல்லை அதற்குள் ஒளித்து வைத்து எதிரில் இருப்பவர் அது எங்கிருக்கிறது என்பதி அனுமானித்து அதன் மேல் இருகைகளை வைத்து மூடவேண்டும். சரியாக கணித்தால் பின்பு அடுத்தவர் முறை.


பச்சகுதிர விளையாட்டு :-
முதல்ல ஒருத்தர் தரையிலே கால் நீட்டி உட்காந்து அவரை எல்லோரும் தாண்டனும்.. அப்புறம், ஒரு கையை வப்பார், அதையும் தாண்டீட்டா ரெண்டு கையையும் வப்பார், அப்புறம் எழுத்து குனிஞ்சு நிக்கையிலே தாண்டனும், அப்படியே கொஞ்சம் கொஞ்சமா தாண்டனும்.. எப்பயாவது தாண்டையிலே இடிச்சிட்டா.. அப்புறம் இடிச்சவங்க உட்காற.. அப்படியே வெளையாட்டு தொடரும்..

மேலே சொல்லாமல் விடுபட்டுப்போன எவ்வளவோ விளையாட்டுக்கள் இருக்கின்றன. இப்போது இருக்கும் சிறுவர்களுக்கு இவைபற்றியெல்லாம் எந்த அளவுக்கு தெரிந்திருக்கும் என்று தெரியவில்லை. கிராமங்களில் இவை இன்னும் உயிருடன் இருக்கின்றன என்று நம்புகிறேன்.

தத்தக்கா, புத்தக்கா..


வலைப்பூ நண்பர்களுக்கு இனிய மாலை வணக்கங்கள்...

நம்முடைய கிராமங்களில் பல விளையாட்டுகளை சிறுவர்கள் விளையாடுகின்றனர். நாமெல்லாம் அந்த விளையாட்டுகளை மறந்தே இருப்போம். சிலர் கேள்விபட்டே இருக்க மாட்டார்கள். அதுமாதிரியான மறந்து போன எம் கிராமத்து விளையாட்டுகளை நினைவு படுத்துவதே இந்த தொடர் பதிவின் நோக்கம். 

அந்த வரிசையில் இன்று நாம் தெரிந்துகொள்ளப் போகிற விளையாட்டு சிறுவர்களுக்கானது. அந்த விளையாட்டுக்கு பெயர் "தத்தக்கா, புத்தக்கா.."

இந்த விளையாட்டை, இருவராகவும் அல்லது குழுவாகவும் சேர்ந்து இந்த விளையாட்டை விளையாடுவார்கள். இருவர் என்றால் எதிர் எதிராகவும், குழுவாக இருந்தால் வட்டமாகவும் உட்கார்ந்து கொண்டு விளையாடுவார்கள்.

விளையாட்டுக்கான பாடல்:

தத்தக்கா, புத்தக்கா...!
தவளம் சோறும்...!
இச்சி மரத்திலே ...!
எறும்படிக்கிற வீராயி...!
பன்னி வந்து நீராட...!
பறையன் வந்து தப்பு கட்ட..! 
ஒ..ன் அப்பன்..அப்பன்...
பெயர் என்னா...!
முருங்கப் பூ...!
முருங்கப் பூ தின்னவரே...!
முந்திரி சார் குடித்தவரே...!
பாழும் கையைப் படக்கென்று எடு!
எடுக்கமாட்டேன்,
எடுக்காட்டி தார்...தார்... வாழைக்காய்,
புத்தூர் வாழைக்காய்,
பூப்போல எடுத்துக்கோ...!

ஆடும் முறை:

எல்லோரும் வட்டமாக அமர்ந்துக்கொண்டு கைகளைத் தரையில் குப்புறப் பதித்து வைத்து இருப்பார்கள். இவர்களில் யாரவது ஒருவர் ஒரு கையை மட்டும் வைத்துக்கொண்டு, ஒரு கையால் விளையாட்டின் பாடலை சொல்லி ஒவ்வொரு கையிலும் வைத்து வருவார்.

பாடலில் 'ஒ..ன் அப்பன்..அப்பன்... பெயர் என்னா...!' என கேட்கும் போது யார் கையில் வைத்து கேட்கிறாரோ.. அவர் முருங்கப்பூ என்று சொல்வார். பின்னர் முருங்கப் பூ தின்னவரே...!,முந்திரி சார் குடித்தவரே...!,பாழும் கையைப் படக்கென்று எடு! என்று சொல்வார். அதற்கு அவர் எடுக்கமாட்டேன் என்று சொல்வார்.எடுக்காட்டி தார்..தார்.. வாழைக்காய் தையமுட்டு வாழைக்காய், புத்தூர் வாழைக்காய் பூப் போல எடுத்துக்கோ என்று சொல்வார். 

அப்பன் பெயரை கேட்ட பிறகு, பூப போல எடுத்துக்கோ என்று சொல்லி முடிக்கும்வரை , ஒருவருக்கு மட்டும் இரண்டு கைகளிலும் மாற,மாறி வைத்துப் பாடி கையை எடுக்க வைப்பார்.

அவர் இரண்டு கையையும் எடுத்து நெற்றியில் ஒரு கையும், முதலில் ஒரு கையுமாக வைத்துக் கொள்வார். பின்னர் பாடலை முதலிலிருந்து பாடலைச் சொல்லி சுற்றி வருவார். எல்லோரையும் கையை எடுக்க வைத்த பிறகு ஒவ்வொருவரிடமும் நெற்றியில் இருப்பது என்னா? என்று கேட்பார். அவர் எடுக்க முடியாது என்பார். பின்னர் கேட்பவர் கையைப் பிடுங்கி விடுவார்.

இதுபோல முதுபுறம் இருக்கிறது என்னா? என்று கேட்பார். இதை அவர் இரும்பு என்று சொல்வார். எங்க கையை எடு என்பார்.பின்னர் கேட்பவர்பிடுங்கி விடுவார். இவ்வாறு எல்லாரிடமும் கேட்பார். கேட்டு பிடுங்கி விடுவார். இவ்வாறு தொடர்ந்து விளையாடுவார்கள்.

டிஸ்கி: இந்த விளையாட்டைப் பற்றி சுருக்கமாக விளக்கலாம் என்றால் முடியவில்லை. சற்று பெரிய பதிவாக மாறிவிட்டது. ஒரு கேள்விப்பட்ட விளையாட்டை பதிவாக தருவது முதல் முறை, முதல் முயற்சி. உங்கள் ஆதரவு தொடர்ந்தால் இன்னும் பல சுவாரஸ்யமான விளையாட்டுகள் பற்றி இந்தப் பகுதியில் நீங்கள் அறிந்து கொள்ளலாம். மேலே சொன்ன பாடல் என்னுடைய அலைபேசியில் ரெகார்ட் செய்தேன் ஆனால் அது கிளியராக பதிய வில்லை எனவே அந்த பாடலின் ஆடியோ சேர்க்க முடியவில்லை.
தமிழக பாரம்பரிய விளையாட்டுக்கள் அடியோடு ஒழிந்துவிட்டன. எல்லாக் குழந்தைகளும் தொலைக்காட்சிக்கும், வீடியோ கேமுக்கும், கிரிக்கெட்டுக்கும் மாறிவிட்டனர். பல குழந்தைகளுக்கு அந்த வாய்ப்பும் கிடையாது. அடுக்கு மாடியில் பூட்டப்பட்ட அறையினுள் துணைக்குகூட இன்னொரு குழந்தைகூட இல்லாமல் (நாம் இருவர் நமக்கு ஒருவர் கலாச்சாரம்) தனியாக விளையாடும் பரிதாபம். கிராமத்தின் கலாச்சாரம், பாரம்பரியத்தை மீட்டெடுப்பது மிகவும் கஷ்டமான விசயம் என்றாலும் சிலவற்றையாவது பாதுகாப்போம்.

தட்டாங்கல்



காயா? பழமா?














கண்ணாமூச்சி





ஒரு குடம் தண்ணியெடுத்து...

பாண்டி ஆட்டம்
தாவி விளையாடுதல்

பல்லாங்குழி
நிறையிருந்தால் பாராட்டுங்கள்.. குறையிருந்தால் குறிப்பிட்டுச் சொல்ல
உங்களைத் தவிர யார் இருக்கமுடியும்? தயவுசெய்து
தங்களின் மேலான கருத்துக்களை இங்கு பகிர்ந்து கொள்ளவும்.
                                                                                                                                    கமருதீன்

                                                                     



கிராமத்து விளையாட்டுகள்

தளிர்கள் விளையாட்டுக்கள்***
நண்பர்களே !
நான் சிறுவயதில் விளையாடிய விளையாட்டுக்கள் ஞாபகம் இருந்த வரையில் இங்கு
எழுதுகிறேன். இதே விளையாட்டுக்கள் ஊருக்கு ஊர் மாறுபட்டிருக்கலாம் இல்லை
மருவியிருக்கலாம். தெரிந்தவர்கள் இங்கு இட்டால் மகிழ்ச்சி.


விளையாட்டுக்கள் வீட்டினுள் விளையாடுவது ஒரு வகை. வீட்டிற்கு வெளியே சென்று
ஆடுவது மற்றொன்று. (indoor / outdoor games). சிறுபிள்ளைகள் (ஆண்,
பெண்)அனைவருமாய் ஆடிய விளையாட்டுக்களில் எனக்கு ஞாபகத்தில் நின்ற, சிறு சிறு
விளையாட்டையும் தருகிறேன் கீழே.. பின் ஒவ்வொன்றை பற்றியும் விலாவாரியாக
பேசுவோம்.

வீட்டினுள் ஆடும் ஆட்டங்களில்

1.தாயம், சோவி
2.பல்லாங்குழி
3. ஆடுபுலிஆட்டம்
4.மூன்றுகல் ஆட்டம்
5.செப்புசாமான்
6.கூட்டாஞ்சோறாக்கல்
7.தத்தைக்கா..
8.சங்கு சக்கரம்
9.பருப்புகட
10.கள்ளன் போலீஸ்
11.கிச்சு கிச்சு தாம்பலம்
12.உருண்டை...
13.தட்டாங்கல்
14.ஜோடி சேர்த்தல்( வளையல் துண்டுகளால்)
15.புத்தக கிரிக்கெட்
16.என்ன பிடிக்கும் (வார்த்தை விளையாட்டு)
17.எழுத்து கண்டுபிடித்தல்
18.கட்டம் நிரப்புதல்
19.நாடு பிடித்தல்
20.சீட்டு கட்டு
21.பெயர் நிரப்பல்
22.கொக்கு பறபற
23.மூக்குபொடி
24.குத்துவிளையாட்டு.
25.அக்கக்கா சினுகோலி

இப்படி சில வீட்டிற்கு வெளியே

1.கண்ணாமூச்சி (இதிலே பல வகை உண்டு பல பாட்டும் உண்டு.)
2.கபடி
3.பாண்டி
4.காதுல பூ சொல்லி
5.பூ பறிக்க வருகிறோம்
6.ஒரு கொடம் தண்ணியெடுத்து (விளையாட்டின் பிரத்யோக பெயர் மறந்தபடியால் அதன்
முதல் வார்த்தையை இடுகிறேன்)
7.பாட்டியும், ஊசியும்
8.தோசை வார்த்தல்
9.கொக்கோ
10.நொண்டி
11.பச்சைக்குதிரை
12.எரிபந்து
13.கோலி
14.கிட்டிபுள் (அ) குச்சி-கம்பு
15.கவட்டபுள்
16.பட்டம்
17.காத்தாடி
18.தட்டான் பிடித்தல்(கிராமத்தில் தட்டான், ஓணான் பிடிப்பதெல்லாம் சகஜம்)
19.டயர் (சைக்கிள் டயர்) ஓட்டுதல்
20.நுங்கு வண்டி
21.பேருந்து விளையாட்டு
22.எட்டாங்கோடு
23.சோடா போடுதல்
24.மாட்டுவண்டி
25.கயராட்டம் (ஸ்கிப்பிங் வகையறா)
26.கள்ளன் போலீஸ்
27.பந்தாட்டம்
28.தொட்டுபுடிச்சி
29.ஓட்டப்பந்தயம்
30.நீச்சல் (தண்ணீர் ஆட்டம்)
31.களிமண் பொம்மை செய்தல், மணல் விளையாட்டுகள்
32.பெயர் எழுதுதல் (வேம்பங்கொட்டை பால் கொண்டு)
33.ஊஞ்சல், ஆலமரவிழுது ஊஞ்சல்
34.தென்னை வண்டி
35.கல்லா மண்ணா
36. உஸ்தி


இன்னும் நான் மறந்தவை நிறைய இருக்கலாம். அனைத்துமே விளையாடியது கனவாகி போனது
இப்போது. இத்தனை ஆட்டங்கள் இருக்க, இப்போதைய குழந்தைகள் ஏனோ தொலைக்காட்சி,
வீடியோ விளையாட்டு, என்று இருக்கையில் இதை பற்றி அவர்கள் அறிந்து கூட இருக்க
மாட்டார்களே என்ற கவலையில் தோன்றியது தான் இந்த கட்டுரை. அப்போழுதும் செஸ்,
கேரம்போர்ட் என இருந்தாலும் குழந்தைகளால் பெரிதும் விரும்பப்பட்ட விளையாட்டுகள்
இவை என்று தான் தோன்றுகிறது. இந்த விளையாட்டெல்லாம் தெருவில் ஆட பள்ளியில்
கொக்கோ, அனைத்து பந்து விளையாட்டுக்கள், செஸ், ஷட்டில் கார்க், முயுசிக்கல்
சேர், கேரம், ரிங்க் என அனைத்து விளையாட்டுகளும் இருந்தது. நான் கண்ட இந்த
விளையாட்டுக்கள் மறக்காமல் இருக்கவும் அழிந்துவிட கூடதென்ற ஆதங்கத்திலும் எழுத
விழைகிறேன். இனி ஒவ்வொன்றாய் பார்க்கலாம்.

சிறுமியர் விளையாட்டுக்கள்
"தென்காசி வட்டாரத்தில் தட்டாங்கல், பல்லாங்குழி, பூப்பறிக்க வருகிறோம், பாட்டி பேத்தி, அல்லி மல்லி தாமரை, செங்கல் எடுத்துச் சிறு வீடு கட்டு, டில்லி அக்கா தண்ணிக்குள்ள, அக்கக்கா கிளி செத்துப் போச்சு, உருண்டை உருண்டை கல்லெடுத்தல், குளத்துக்குள்ள கரை மேல, கீ கீ ரோஜா, ஈஞ்சக்காத்தண்ணி இறைப்பேன், ஒரு குடம் தண்ணி எடுத்து ஒரு பூப் பூத்தது, கிச்சு கிச்சுத் தாம்பாளம், வெத்தலப் பெட்டியைக் காணல, வளையல் விளையாட்டு, பானை சட்டி, நொண்டி, ஆபத்துக்கு கை கொடுத்தல், பூச்சொல்லி விளையாட்டு, சூடு சூப்பி, துணி துவைத்தல், அக்கக்கா சிணுக்கோரி, மெல்ல வந்து கிள்ளிபோ ஆகிய சிறுமியர் விளையாட்டுக்கள் கண்டறியப்பட்டுள்ளன."


= சிறுவர் விளையாட்டுக்கள்
  • கால் தூக்கிக் கணக்குப் பிள்ளை
  • ஆவியம்
  • பம்பரம் விளையாட்டு
  • தவிட்டுக் குஞ்சி
  • கிளித் தட்டு
  • தெல்லு
  • கிந்தான்
  • சைக்கிள் கிந்தான்
  • ஆயிரம் கிந்தான்
  • உப்பு விளையாட்டு
  • கள்ளன் போலீசு
  • கோலி
  • வண்ணாம் பொதி
  • கிட்டிப்புள்
  • மந்தி ஓடுதல்
  • பந்து விளையாட்டு
  • மாக்கொளக் கட்டை
  • ஒச்சிய்யான்
  • தலைவனைக் கண்டுபிடித்தல்
  • உருண்டை திரண்டை
  • மாட்டுக்கல் திரி
  • தேர் விளையாட்டு
  • மாட்டு விளையாட்டு
  • குருட்டுக் கொக்கு
  • ஐஸ்பால் ரெடி
  • கல்லெடுக்கும் விளையாட்டு
  • காற்றாடி
  • பட்டம்
  • சூடிசுப்பி
  • ஓத்தையா? ரெட்டையா?
  • தைத்தக்கா கதை
  • வட்டத்திரி
  • எலியும் பூனையும்
  • காக்காக் குஞ்சு
  • குண்டு விளையாட்டு
  • ஆடு - ஓநாய் விளையாட்டு
  • சில்லு விளையாட்டு
  • ஆனைத்திரி பூனைத்திரி
  • காட்டு கண்ணாமூச்சி

சிறுமியர் விளையாட்டுக்கள்

  • பூப்பறிக்க வருகிறோம்
  • பூசணிக்காய் விளையாட்டு
  • உன் புருசன் பெயரென்ன?
  • பூச்சொல்லி விளையாட்டு
  • ஒருபத்தி இருபத்தி
  • குச்சு குச்சு ராக்கம்மா
  • சோற்றுப்பானை விளையாட்டு
  • சுழற்சிக்காய் விளையாட்டு
  • திருத்திரி மொம்மக்கா
  • ரானா மூனா தண்டட்டி
  • என் தலைக்கு எண்ணெய் ஊத்து
  • கரகர வண்டசிறுவர் சிறுமிய விளையாட்டுக்கள்
  • நொண்டி
  • நிலாப் பூச்சி
  • கிறுகிறு மாம்பழம்
  • சாட்டு பூட்டு
  • கண்ணாமூச்சி
  • ஒரு தலையிலே ஆடு மேயுதாம்
  • யாருக்கு வேட்டை?

மகளிர் விளையாட்டுக்கள்

  • பல்லாங்குழி
  • தட்டாங்கல்
  • தாயம்

ஆடவர் விளையாட்டுக்கள்

  • சடுகுடு
  • பதினைஞ்சாம் புலி
  • உறியடி
  • சேவல் கட்டு
  • எருது கட்டு

== மேலும் குறிப்புகள் ==
கோலிகுண்டு, பம்பரம், சில்லாக்கு, பாண்டி, ஒத்தையா ரெட்டையா, சொட்டாங்கல்லு, பூப்பறிக்க வருகிறோம், காலாட்டுமணி கையாட்டுமணி, எறிபந்து, கொலகொலயா முந்திரிக்கா, பச்சக்குதிர தாண்றது, ஓடிப்புடிச்சு ஒளிஞ்சுபுடிச்சு, தாயம், பரமபதம், ஆடுபுலியாட்டம், பல்லாங்குழி, கல்லா மண்ணா, டியாண்டோ டியாண்டோ, திருடன் போலீஸ், தீப்பெட்டிப்படம் சேக்கிறது, சடுகுடு, கிட்டி (கில்லி), எருவாட்டி, கண்ணாமூச்சி, கிறுகிறுவானம், ரயில்வண்டி, நொங்குவண்டி டயர்வண்டி ஓட்றது, குச்சி விளையாட்டு (சிலேட்டு குச்சிதான்), குலுக்குச்சீட்டு என இளமை பூராம் விளையாடித் திரிந்ததால் இன்றுவரை விளையாட்டாய் இருக்கிறது வாழ்க்கை.

கனவாகி வரும் கண்ணாமூச்சி விளையாட்டு

விளையாட்டுக்கள் வீட்டினுள் விளையாடுவது ஒரு வகை. வீட்டிற்கு வெளியே சென்று ஆடுவது மற்றொன்று.
ஆடுபுலி ஆட்டம், கபடி, சல்லிக் கட்டு, உறியடி, வழுக்கு மரம், சிலம்பாட்டம், வண்டிப் பந்தயம். கால்தூக்கிக் கணக்குப் பிள்ளை, பந்து, பச்சைக் குதிரை, பம்பரம்,
புளியங் கொட்டை, கபடி, கள்ளன் போலீஸ் இவை சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான விளையாட்டு
பல்லாங்குழி, தாயம், சில்லுக் கோடு, தட்டா மாலை, கும்மி,
கோலாட்டம், பாண்டி, கண்ணா மூச்சி, பூசணிக்காய், குலைகுலையா முந்திரிக்காய், எலியும் பூனையும், ஒரு குடம் தண்ணி ஊத்தி, பூப்பறிக்க வருகிறோம், கரகர வண்டி, சில்லுக் கோடு, பூப்பறிக்க வருகிறோம், கிச்சுக்
கிச்சுத் தாம்பாளம், பல்லாங்குழி, கொழுக்கட்டை, நொண்டி இவை சிறுமியர்கள் மற்றும் குமரிப்பெண்களுக்கான விளையாட்டு. இளமைக்காலம் முழுவதும் விளையாடித் திரிந்ததால்தான் நமக்கு இன்றுவரை விளையாட்டாய் இருக்கிறது வாழ்க்கை.
நாட்டுப்புறங்களில் 126 வகை விளையாட்டுக்கள் விளையாடப்பட்டதாக வரலாற்றுக்குறிப்புகள் தெரிவிக்கின்றன. இவற்றில் கண்ணாமூச்சி, உருண்டை திரண்டை, அந்தக் கழுதை இந்தக் கழுதை, கல்லுக் கொடுத்தான் கல்லே வா, ராஜா மந்திரி, பருப்புக் கடைந்து, அத்தளி புத்தளி, கில்லாப் பறண்டி, அக்கக்கா கிளி செத்துப்போச்சு, சீப்பு விக்கிது. தொட்டுப் பிடிச்சு, ஐஸ் பால் போன்ற விளையாட்டுகள் ஒரே குழுவாக விளையாடும் விளையாட்டுகளாகும். இந்த விளையாட்டுகளில் தாய்ச்சி எனப்படும் தலைவர் ஒருவர் இடம் பெற்றிருப்பார்.
மெல்லவந்து மெல்லப்போ, பூச்சொல்லி போன்ற விளையாட்டுகளில் இரு உத்திதார் இருக்கிறார்கள். இவை அணி பிரிந்து விளையாடும் விளையாட்டுகள். குழுவாக பிரிந்து விளையாடும் சில விளையாட்டுக்களில் உத்திதாய்ச்சி எனப்படும் துணைத்தலைவர் இடம்பெற்றிருப்பார்.
கண்ணாமூச்சி
கண்ணாமூச்சி விளையாட்டில் தலைவராக கருதப்படுபவர், குழுவில் இருந்து ஒருவரை தேர்ந்தெடுக்கிறார். அவரை பட்டவர் என்று கூறுகின்றனர். அவரது கண்ணினை, தலைவர் மூடிக்கொள்ள, மற்ற குழந்தைகள், ஓடி ஒளிந்து கொள்வர். அவர்கள் ஓடி ஒளிந்து கொள்ளும் நேரத்தில் தலைவரானவர்
“கண்ணா மூச்சி ரேரே…
காரே முட்டே ரே ரே …
ஒருமுட்டையை தின்னுபுட்டு….
ஊளை முட்டைய கொண்டுவா ….” என்று பாடுவார்.
பாடல் முடிந்தவுடன் தலைவர் அந்த நபரின் கண்களைத் திறந்து விடுவார். ஒளிந்திருக்கும் குழந்தைகளை அந்த நபர் தேடிக்கொண்டு போகும் போது அவரிடம் சிக்கியவர் அவுட்டாகிறார். இதன் பின்னர் அவுட்டான நபரின் கண்கள் மூடப்படும். மீண்டும் விளையாட்டு தொடரும். தேடும் நபரிடம் அகப்படாமல் குழந்தைகள் அனைவரும் தலைவரை தொட்டுவிட்டால் அவர்கள் பழமாவார்கள். இதுபோன்ற சுவாரஸ்யமான விளையாட்டுகளை எல்லாம் கிராமங்களில் காண முடிவதில்லை என்பதுதான் வேதனை. சிறுவர்களின் உலகத்தை இப்பொழுது கார்டூன் சேனல்களும், வீடியோ விளையாட்டுக்களும் ஆக்கிரமித்துக் கொண்டிருப்பதால் நாட்டுப்புறவிளையாட்டுக்களை இனி கதைகளில் மட்டுமே படிக்கவேண்டியிருக்கும்.


கிராமத்து விளையாட்டுகள்


ஆபியம் ,,,,,,,,,,,

,இச்டாபியம் ,,,,,,,,,,,
லாகரசிய கொக்கு
லாகரசிய மன்ன தொடு,,,,,,,,,
சரா சரி உதை குடு ,,,,,,,,,,
ஒருவன் குனிய வேண்டும் மற்றவர்கள்
இந்த மந்திரத்தை சொல்லி தாண்டவேண்டும் ,,,,,
சரா சரி உதை குடுக்கு குடுப்போம் பாருங்கள்
உதை குனிதவனுக்கு கும்மா குத்துதான் ,,,,,,,,போங்க

பம்பரம் ,,,,,,,,,,,,

முதலில் வட்டம் போடுவோம்
இதில் எத்தனை பேரு வேணாலும்
கலந்துகொல்லாம் ,,,,,,,,,பம்பரத்தில் சாட்டையை சுத்த கூடாது ஒன்று ரெண்டு முனு சொன்னவுடன் பம்பரத்தில் சுத்தி அதை முதலில் யாரு யாரு அபிட் எடுகிரர்களோ அவர்கள்
பம்பரம் தப்பித்தது ,,,,,
கடைசில் அபிட் எடுத்தவன் பம்பரம் வட்டத்தில் சிக்கும்
அதை ,,,,,,,,,வட்டத்தில் இருந்து வெளிய வரவரைக்கும் அந்த பம்பரம் ,
சொறி நாயிகிட்ட கடி பட்ட போல போயுடும் ,,,,,,,,
மீண்டும் மீண்டும் அதிக உக்கு வாங்கும் பம்பரம் அருவாளால் வெட்டப்படும்

கிட்டி புல்லு ,,,,,,,,

இதில் இரட்டை அடி
மூன்றடி ,,,,,,,,,,
லாங் சாட் ,,,,,,,,,,

கவ குச்சி ,,,,,,,,

மூங்கில் குச்சி ,,,,,,,,,,கவயோடு வெட்டி,,,
அதை ஒவ்வரும் ஒன்னு ஒன்னு வைத்திருப்போம் ,,,
இதை வயலில் தான் விளையாடுவோம்
இந்த விளையாட்டில் ,,,,,,,,,,,கல்லு ,மாட்டு சாணி,, பேப்பேர் ,,,,இந்த விளையாட்டில் இடம் உண்டு
கவகுச்சியை ஒருவன் தன் முதுகுக்கு பின்னால் தூக்கி பிடிக்க வேண்டும் ,,,
மற்றொருவன் அதை அவன் குச்சியால் அதை தட்டி விட வேண்டும்
அவன் திரும்புவதற்கு குள் அந்த கவ குச்சி பல கைகள் மாறிவிடும்
அவன் நம்மை தொட வரும்போது ,,,,,,,,,மேலே சொன்ன ,,,கல்லு ,மாட்டு சாணி,, பேப்பேர்
இதில் எதாவது ஒன்றில் நம் கவகுச்சியை வைத்துவிட்டால் நாம் தப்பித்து விடுவோம்
சில பேர் கவகுச்சியை ஆறு கிலோ மீட்டர் வரை தள்ளிக்கொண்டு போயிருக்கிறோம்

100குச்சி ,,,,,,,,,,,,

இதை திண்ணையிலோ
முத்தத்திலோ ஆடுவோம் ,,,,,,,,,,
10 விளக்கமாறு குச்சியை ,,,
பாதி பாதிய உடைத்து கொள்வோம்
ஒரே ஒரு குச்சி மட்டும் பெரியதாக இருக்கும்
பத்து குச்சி யை தரையில் போடுவோம்
முதலில் ஒரு குச்சியை மட்டும் அலங்கமல் எடுக்க வேண்டும்
அலங்கினால் தோற்றுவிடுவோம் ,,,,,,,,,அந்த ஒரு குச்சியால்
ஒன்பது குச்சியை எடுக்கவேண்டும் எடுத்தவன் வெற்றி ,,,

5.4 ஆடவர் விளையாட்டுகள்
தனி     நிலையிலும் குழு நிலையிலும் அமைந்த புற விளையாட்டுகளாக
ஆடவர் விளையாட்டுகள் அமைந்துள்ளன. உடல் திறன், அறிவுத்
திறன், வீரப் பண்பு ஆகிய மூன்று கூறுகளில் ஏதேனும் ஒன்றை
அடிப்படையாகக் கொண்டு இவ்விளையாட்டுகள் ஆடப் படுகின்றன.
போட்டி மனப் பான்மையைத் தூண்டுபவையாகவும் வெற்றி தோல்வியை
நிர்ணயிக்கும் வாய்ப்பு நிலை விளையாட்டுகளாகவும் உள்ளன. ஒரு
சமுதாயத்தில் போட்டி விளையாட்டுகள் அதிக எண்ணிக்கையில்
காணப்பட்டால் அது அந்தச் சமுதாயத்திற்குச் சிறப்புச் சேர்க்கும் என்று
கூறுவதுண்டு. ஏனையோர் ஆடும் விளையாட்டுகளை விட ஆடவர்
விளையாட்டுகளில் பார்வையாளர் மிகுதி. ஆடவர் இருவராகவோ, இரு
அணிகளாகவோ பிரிந்து ஆடும் நிலையில் பார்வையாளர்களும் இரு
அணியினராகப் பிரிந்து, ஆடுவோருக்கு உற்சாக மூட்டுவதைக்
காணலாம்.
கபடி,     சிலம்பம், சல்லிக் கட்டு, உறியடி, வழுக்கு
மரம், வண்டிப் பந்தயம், புலியாட்டம், ஆடுபுலியாட்டம்,
மான்கொம்பாட்டம், சுருள்கத்தி சுழற்றுதல், வடம் இழுத்தல்
போன்ற விளையாட்டுகள் ஆடவர் விளையாட்டுகளாக நாட்டுப்புற
மக்கள் மரபில் இன்றும் ஆடப்பெற்று வருகின்றன.
கபடி விளையாட்டு
சடுகுடு,     பலிஞ்சடுகுடு, கபடி என்றெல்லாம் கபடி விளையாட்டு
அழைக்கப்படுகிறது. இது இளைஞர்களும், சிறுவர்களும் விரும்பி ஆடும்
போட்டி விளையாட்டு ஆகும்.
கிராமத்து     மந்தைகளிலும் ஆற்று மணலிலும் இவ்விளையாட்டு
ஆடப்படும். இது விதிமுறைகளுடன் கூடிய விளையாட்டு ஆகும்.
ஆடுவோர் இரு அணியினராகப் பிரிந்து அணிக்கு ஏழு பேராகவோ,
ஒன்பது பேராகவோ, சேர்ந்து ஆடுவர். பாடிச் செல்வது கபடி
விளையாட்டின் அடிப்படையாகும். முதல் அணியைச் சேர்ந்தவர் பாடிக்
கொண்டே இரண்டாம் அணியினர் இருக்கும் பகுதிக்குச் சென்று,
ஒருவரையோ, இருவரையோ தொட்டு வெளியேற்றி வரவேண்டும்.
அதேபோல் இரண்டாம் அணியினரும் செய்ய வேண்டும். எந்த அணி
அதிகப் புள்ளிகள் எடுக்கின்றதோ அது வெற்றி பெற்றதாகக்
கருதப்படும். கபடி விளையாட்டு இன்று உலகம் முழுவதும் பரவி
ஒலிம்பிக்கில் இடம்பெறும் அளவிற்கு வளர்ச்சி பெற்றுள்ளது.
எல்லைக்கோடு
ஏறுகோடு
நடுக்கோடு
ஏறுகோடு
எல்லைக்கோடு

கபடிப் பாடல்கள்
நாந்தான் வீரன்டா
நல்லமுத்து பேரன்டா
வெள்ளிச் சிலம்பெடுத்து
விளையாட வாரன்டா
தங்கச் சிலம்பெடுத்துத்
தாலிகட்ட வாரன்டா
சடுகுடு சடுகுடு சடுகுடு
சடுகுடு.
கீத்து கீத்துடா
கீரைத் தண்டுடா
நட்டு வச்சன்டா
பட்டுப் போச்சுடா
போச்சுடா போச்சுடா.....

சிலம்பாட்டம்
தமிழக     நாட்டுப்புற மக்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றாக
விளங்கும் கருவி விளையாட்டு சிலம்பாட்டம் ஆகும். சிலம்பு
விளையாட்டு, குச்சி விளையாட்டு, கம்பு விளையாட்டு, சிலம்புக்கலை
என்றும் இது வழங்கப்படும். சிலம்பு என்பதற்கு ஒலித்தல் என்று
பொருள் உண்டு. கம்புகளை மாறிமாறி அடித்து ஒலி எழுப்புவதால்
சிலம்பம், சிலம்பாட்டம் எனப்பெயர் பெற்றது எனலாம். இது தற்காப்புக்
கலையாகவும் போர்க் கலையாகவும் விளங்குகிறது. சிலம்பாட்டத்தைக்
கற்றுக் கொள்ளக் குறைந்தது ஆறு மாதக் காலம் ஆகும். சிலம்பாட்டம்
கற்றுக் கொடுக்கச் சிலம்பாட்டக் கழகங்கள் பல தமிழகத்தில் உள்ளன.
சிலம்பாட்டம் ஆடுவதற்குக் குறைந்தது இருவர் வேண்டும். நன்கு
பயிற்சி பெற்ற ஆட்டக்காரர்கள் சிலம்பாட்டம் விளையாடும் போது,
பார்ப்பதற்கு ஆர்வமாகவும் வியப்பாகவும் இருக்கும். ஆண்கள்,
பெண்கள் என்று இருபாலரும் இன்று சிலம்பாட்டத்தைக் கற்று
விளையாடி வருகின்றனர்.
பொங்கல்     திருவிழா, கோயில் விழாக்கள், ஊர்வலங்கள் இவற்றில்
சிலம்பாட்டம் தவறாது இடம் பெறும்.
வழுக்கு மரம்
 
ஆடவரின்     உடல் திறனைச் சோதிப்பது வழுக்கு மரம்விளையாட்டு ஆகும். நன்கு வழுவழுப்பாகச் செதுக்கப்பட்ட
உயரமான மரம் நடப்படும் அதனை மேலும் வழுவழுப்பாக்கப்
பலவிதமான எண்ணெய்கள் திரும்பத் திரும்பத் தடவப்படும்.
மரத்தின் உச்சியில் பண முடிப்பு வைக்கப்படும். வழுக்கு மரத்தில்
ஏறி அந்தப் பண முடிப்பை எடுக்கும் திறன் உள்ளவர் யார்
என்பதைக் கண்டறிவதுதான் போட்டி. அவ்வளவு எளிதாக அந்தப்
பண முடிப்பை     எடுத்துவிட முடியாது.    இளைஞர்கள்
முண்டியடித்துக் கொண்டு இப்போட்டியில் கலந்து கொள்வார்கள்.
ஊர் மக்கள் அனைவரும் திரண்டு மகிழ்ச்சி ஆரவாரத்தோடு
இவ்விளையாட்டைக் கண்டு களிப்பார்கள். வழுக்கு மரத்தில்
ஏறிப் பண முடிப்பை எடுக்கும் இளைஞர் சிறந்த வீரராகக்
கருதப்படுவார். அவருக்கு மேலும் பணமும் பாராட்டுகளும்
கிடைக்கும். தெய்வ வழிபாட்டின் ஒரு பகுதியாகக் கிராமப்
புறங்களில் இவ்விளையாட்டு நடத்தப்படும்.
ஆடுபுலி ஆட்டம்
ஆடவரால்     விளையாடப்படும் வரைபட ஆட்டம் ஆடுபுலி
ஆட்டம்
ஆகும். இது பதினைந்தாம் புள்ளி என்றும்
வழங்கப்படும். அறிவுத் திறனை வளர்க்கக் கூடிய இந்த
விளையாட்டிற்கு இருவர் வேண்டும்.
ஒருவர்     ஆடுகளின் சார்பாகவும், ஒருவர் புலியின் சார்பாகவும்
விளையாட வேண்டும். மண் தரையிலோ அல்லது கல், சாந்துத்
தரையிலோ ஆட்டத்திற்குரிய வரைபடத்தை வரைந்து கொள்ள
வேண்டும். ஆடுகளின் சார்பாக விளையாடுபவர் பதினைந்து
காய்களையும் (கற்கள் அல்லது புளியங் கொட்டை) புலியின் சார்பாக
விளையாடுபவர் மூன்று காய்களையும் வைத்துக் கொள்ள வேண்டும்.
இப்பொழுது     ஆடுகளுக்குரிய காய்களை வைத்துக் கொண்டே
வரவேண்டும். அப்பொழுது புலி ஆடுகளி்ன் இருப்பு முறைக்கேற்ப
நகர்ந்து கொண்டும் ஆடுகளை வெட்டிக் கொண்டும் வரும். புலி நகர
முடியாத அளவிற்கு ஆடுகள் சுற்றி வளைத்துக் கொண்டால் புலி
தோற்றதாகக் கருதப்படும். ஆடுகள் அனைத்தையும் புலி
வெட்டிவிட்டால் புலி வெற்றி பெற்றதாகக் கருதப்படும். ஆடுவோரின்
திறமையைப் பொறுத்து ஆட்டத்தின் காலம் நீளும்.
அறிவுக்     கூர்மைக்கும் சிந்தனையை ஒருமுகப் படுத்துவதற்கும்
இவ்விளையாட்டு சிறந்த பயிற்சியாகும். இந்தோனேசியா, இலங்கை,
மலேசியா போன்ற நாடுகளிலும் இவ்விளையாட்டு உள்ளது குறிப்பிடத்
தக்கதாகும்.
5.4.1 உடல் திறன் விளையாட்டு
ஆடவரின்         உடல்     அமைப்பு     வலிமையானதாகவும்
உறுதியுடையதாகவும் அமைந்திருப்பதால் அதற்கேற்ற வகையிலேயே
விளையாட்டுகளும்     வடிவமைக்கப்     பட்டுள்ளன.     ஆடவர்
விளையாட்டுகளில் உடல் திறனை வெளிக்காட்டும் வகையில் அமைந்த
விளையாட்டுகளே மிகுதி, கபடி, சிலம்பாட்டம், உறியடி, வழுக்கு மரம்,
வடம் இழுத்தல், இளவட்டக் கல் போன்ற விளையாட்டுகள்
இவ்வகைப்பாட்டில் அடங்கும்.
உறியடி
உறியடி     விளையாட்டில் ஆடவரின் உடல்திறன் எவ்வாறு
வெளிப்படுகிறது என்று காண்போம். வைணவக் கோயில்
திருவிழாக்களில் உறியடித்தல் என்னும் சடங்கு, வழிபாட்டின் ஓர்
அங்கமாக நிகழ்த்தப்பட்டு வருகின்றது. ஆயர் பாடியில் கண்ணன்
வெண்ணெய் திருடி விளையாடியதை நினைவு கூரும் வகையில்
உறியடித்தல் சடங்கு நடத்தப் படுவதாகக் கூறப்படுகிறது.
    வடிவில் மூங்கில் கழிகள் நடப்பட்டிருக்கும். கழியின்
மையப் பகுதியில் ஓர் உருளையும் அதன்வழி ஒரு கயிறும்
தொங்கவிடப்பட்டிருக்கும். கயிற்றின் ஒரு முனையில் ஒரு மண்
பானையைக்கட்டி,மறு நுனியை ஒருவர் பிடித்துக் கொள்வார். அந்தப்
பானையினுள் வண்ணக் கலவை நீர் நிரப்பப் பட்டிருக்கும்.
இப்பொழுது அந்தப் பானையைக் கம்பு கொண்டு அடித்து
உடைக்க வேண்டும்.இது எளிதான செயல்தானே என்ற எண்ணம்
உங்கள் மனதில் தோன்றும். அது அவ்வளவு எளிதான செயலன்று.
ஏனென்றால் பானையை உடைக்க முன்வருபவர் கண்ணைக் கட்டிக்
கொள்ள வேண்டும். கண்ணைக் கட்டி இரண்டு மூன்று முறை
அவரைச் சுற்றி விட்ட பின்பே கையில் கம்பைக் கொடுத்து
அனுப்புவர். இந்நிலையில் அவர் எந்தத் திசையில் நிற்கின்றார் என்று
அவருக்கே தெரியாது.
கண்ணைக்     கட்டிக் காட்டில் விட்டது போல என்று கூறுவார்களே
அந்த நிலைதான் அவருக்கு. அந்த நிலையையும் தாண்டி அவர்
பானை அருகில் வந்துவிட்டால் பானை மேலும் கீழும் இழுத்து
விடப்படும். இந்தத் தடைகளை எல்லாம் மீறி அவர் பானையை
உடைத்து வெற்றி பெற வேண்டும். வேறு சில இடங்களில் கண்ணைக்
கட்டாமல் ஒரு காலை மட்டும் மடக்கிக் கட்டி நொண்டியடித்துக்
கொண்டே பானையை உடைக்க வேண்டும். பானையை உடைக்க
விடாமல் சுற்றியிருப்போர் அவர் மீது மஞ்சள் நீரை ஊற்றுவர்.
இதுபோன்ற தடைகளை எல்லாம் மீறிப் பானையை உடைப்பவருக்குப்
பாராட்டுகளும் பரிசுகளும் வழங்கப்படும். உறியடி விளையாட்டின்
போது ஊரே திரண்டுவிடும். உற்சாகம் கரை புரண்டோடும்.
5.4.2 வீர விளையாட்டு
காதலும்     வீரமும் தமிழர் வாழ்வின் அடிப்படை. மல்லராகவும்
மறப்பண்பு உடையோராகவும் வீரப் பற்று மிக்கோராகவும் தமிழர்கள்
விளங்கியதைத் தமிழ் இலக்கியங்கள் எடுத்துக்காட்டும். இத்தகைய
மறப்பண்பை வளர்த்தெடுக்கும் வகையிலேயே இன்றும் வீர
விளையாட்டுகள் மரபாகவும், பண்பாட்டுச் செயல்பாடாகவும் நிகழ்த்தப்
பட்டுவருகின்றன.
சல்லிக் கட்டு
நாட்டுப்புற     மரபில் வீர விளையாட்டாகக் கருதிப் போற்றப்படுவது
சல்லிக் கட்டு்
ஆகும். தமிழர் திருநாளாம் தைத்திருநாளின் ஓர்
அங்கமாக ஊர்கள் தோறும் சல்லிக் கட்டு வெகு விமரிசையாக நடத்தப்
படுவதுண்டு.எருது கட்டு, மஞ்சு விரட்டு, ஏறு தழுவுதல்,மாடு
பிடித்தல்
என்று பல பெயர்களில் வழங்கப் பெறும்
இவ்விளையாட்டினைப் பார்ப்போம்.
முரட்டுக்     காளைகளை விரட்டிப் பிடித்து வீரத்தை வெளிப்படுத்தும்
போட்டி விளையாட்டாக, சல்லிக் கட்டு நிகழ்த்தப் படுகின்றது. சல்லிக்
கட்டில் பயன்படுத்துவதற்கு என்றே காளைகள் வளர்க்கப்பட்டு,
அவற்றிற்குப் பயிற்சி அளிக்கப் படுகின்றது. இவ்வாறு பயிற்சி பெற்ற
காளைகள் சல்லிக் கட்டு நடைபெறும் இடங்களுக்கு அழைத்து
வரப்பட்டு, போட்டிக்கு விடப்படுகின்றன. காளைகள் வாடி வாசல்என்ற பகுதியிலிருந்து வெளிக்கிளம்பி எதிர்ப்பட்டோரை எல்லாம்
முட்டித் தள்ளியும் மிதித்தும் ஓடிவரும்.
காளைகளின்     போக்கை அறிந்த, காளைகளைப் பிடிக்கப் பயிற்சி
பெற்ற, காளைகளின் சாகசம் அறிந்த இளைஞர்கள் சீறிவரும்
காளைகளின் மீது துணிச்சலாகப் பாய்ந்து திமிலை இறுகப் பற்றியோ,
கொம்பைப் பிடித்து மடக்கியோ அடக்குவர். அனுபவமில்லாத சிலர்
காளைகளால்     காயப்படுவதுமுண்டு.     காளைகளைப் பிடித்து
அடக்கியோருக்குப் பலவிதமான பரிசுகள் வழங்கப் பெறும்.
 
 
நிறையிருந்தால் பாராட்டுங்கள்.. குறையிருந்தால் குறிப்பிட்டுச் சொல்ல உங்களைத் தவிர யார் இருக்கமுடியும்? தயவுசெய்து தங்களின் மேலான கருத்துக்களை இங்கு பகிர்ந்து கொள்ளவும்.
                                                                                                                                    கமருதீன்
                                                                  

Tuesday 25 September 2012

Tamil Tv K.Tv Sirippoli Tv தமிழ் காமடி சானல்


தமிழ் ஜோக் 24 மணிநேரமும் சிரிங்க
http://worldtv.com/funnytamil


கே டிவி 24 மணிநேரமும்
http://livetvchannelsfreein.com/ktv.html

கலைஞர் டிவி ஜோக்ஸ்
http://www.kalaignartv.com/category.php?cat=Comedy


தமிழ் காமடி சானல்

http://www.tamiltvlive.info/2012/01/tamil-comedy-channel-24x7-live.html


கிளாசிக் ஜோக் காமடி கதம்பம்

http://tamilcomedy.info/view/281/vadivelu-in-politics_classic-comedy/


Saturday 22 September 2012

ஆடு வளர்ப்பு -லாபம் நிரந்தரம்!


நீங்களும் ஒரு தொழிலதிபர் ஆகலாம். ஆடுவளர்ப்பின் மூலம் ஆயிரம் ஆயிரமாய் அள்ளலாம்..!


talaseri goat
தலசேரி இன பெட்டை ஆடு-குட்டியுடன்
 வான்கோழி, காடை, ஈமு என வகை வகையாக இறைச்சிகள் இருந்தாலும், நாட்டுக்கோழிக் கறிக்கும் வெள்ளாட்டுக் கறிக்கும் உள்ள மவுசு குறைவதேயில்லை. எப்போதுமே சந்தையில் அவற்றுக்கான கிராக்கி உச்சத்தில்தான். அவற்றின் விலையே இதற்கு சாட்சி. அதனால்தான் விவசாயத்தோடு சேர்த்து, ஆடு, கோழி என வளர்க்கும் பழக்கம் தொன்று தொட்டே தொடர்கிறது.

ஆரம்ப காலங்களில் நாட்டு ஆடுகள், நாட்டுக் கோழிகள் என்று இருந்ததெல்லாம் காலமாற்றத்திற்கு ஏற்ப கலப்பினங்களாக உருவெடுத்துவிட்டன. இத்தகைய கலப்பினங்கள் இருவகைகளில் உருவாக்கப்படுகின்றன.

ஆராய்ச்சிக் கூடங்களில் வெளிநாட்டு இனங்களோடு உள்நாட்டு இனங்களைக் கலப்பு செய்து வளர்ச்சி ஊக்கிகளை செலுத்தி அதிக இறைச்சி, கொழுப்புடன் கூடிய ஆடு, கோழி ரகங்களை உருவாக்குவது ஒரு விதம். இதற்கென சில கட்டுப்பாடுகள் உண்டு. பலவித சோதனைகளுக்குப் பிறகே இவை சந்தைப் பயன்பாட்டுக்கு வரும். இவற்றுக்குத் தனியாக பெயர்கூட வைப்பார்கள்.


goat business
ஆடுகள் தீவனமெடுக்கும் காட்சி

அடுத்து… விவசாயிகளே நாட்டின் வேறு பகுதிகளை, மாநிலங்களைச் சேர்ந்த நாட்டு இனங்களை வாங்கி இயற்கையான முறையில் கலப்பு செய்து, புதிய ரகங்களை உருவாக்கிக் கொள்வது இன்னொரு விதம். இதற்குக் கட்டுப்பாடுகள் கிடையாது. மரபணு சோதனைகளோ, வேறு பிரச்சனைகளோ கிடையாது.

கால்நடை வளர்ப்பில் ஆர்வமுள்ள பலரும் பெருபாலும் இரண்டாவதான சிக்கலில்லாத இயற்கை முறையையே அதிகம் கடைப்பிடிக்கிறார்கள். குறிப்பாக தலைச்சேரி, ஜமுனாபாரி, சிரோஹி போன்ற வெளி மாநில ஆடுகளோடு நம் மாநில வெள்ளாடுகளைக் கலப்பு செய்து அதன் மூலம் நல்ல தரமான ஆடுகளை உற்பத்தி செய்து பலரும் லாபம் பார்க்கிறார்கள்.

பிறக்கும் போதே அதிக எடை சாதாரணமாக கொடி ஆட்டுக்குட்டி பிறக்குற போது ஒன்றரைக் கிலோ தான் எடை இருக்கும். எட்டு மாசத்துல தான் பதினைஞ்சு கிலோ எடைக்கு வரும். இதுவே கலப்புக் குட்டிகள்னா… பிறக்குறப்பவே ரெண்டரை கிலோ இருக்கும். நாலு மாசத்துலயே பத்து கிலோவுக்கு மேல எடை வந்துடும். எட்டு மாசத்துல முப்பது கிலோ வரைக்கும் கூட வந்துடும்.

goat growing
சினைஆடு-தீவனம் எடுத்துக்கொள்ளும் காட்சி

பொதுவா பத்து பன்னெண்டு கிலோ இருக்கிற ஆட்டுக்கு 2,000 ரூபாயில் இருந்து 2,500 ரூபா வரைக்கும் விலை கிடைக்கும். கொறஞ்சது ஆறு மாசமாவது கொடி ஆட்டை வளர்த்தாதான் அந்த விலை கிடைக்கும். ஆனா, கலப்பின ஆட்டுக்கு நாலு மாசத்திலேயே இந்த விலை கிடைக்கும்’ என்று ஆடு வளர்ப்பில் அனுபவம் உள்ளவர்கள் கூறுகிறார்கள்.

1 ஆட்டுக்கு 15 சதுரடி!

வளர்ந்த ஒரு ஆட்டுக்கு பதினைந்து சதுர அடி இடம் தேவைப்படும். நாம் வளர்க்க எண்ணும் ஆடுகளுக்கேற்ற அளவில் பட்டி அமைத்துக் கொள்ளலாம். செம்மறி ஆடாக இருந்தால், நைலான் வலையிலேயே பட்டி அமைக்கலாம். வெள்ளாடுகளுக்கு கம்பி வலை அல்லது சுவர் மூலமாகத்தான் அமைக்க வேண்டும்.

பட்டிக்குள் கிடாக்கள், குட்டிகள், சினை ஆடுகள், வளரும் ஆடுகள் என தனித்தனியாகப் பிரித்து அடைத்து வைப்பதற்காக தனித்தனிக் கொட்டகைகள் அமைக்க வேண்டும்.

jamunapari_pettai_goat
இனம்: ஜமுனாபாரி (பெட்டைஆடு)

தண்ணீர் கவனம்!

காலை ஒன்பது மணி அளவில் ஆடுகளை மேய்ச்சலுக்கு அனுப்பிவிட்டு, கொட்டகைகளை சுத்தம் செய்துவிட வேண்டும். பதினோரு மணி அளவில் ஆடுகளுக்கு அடர் தீவனம் கொடுக்க வேண்டும். பின் கடலைப் பிண்ணாக்கு ஊறவைத்த தண்ணீர் கொடுக்க வேண்டும். தோட்டங்களில் தேங்கி நிற்கும் தண்ணீரைக் குடிக்கவிட்டால் நோய்கள் தொற்ற வாய்ப்பு இருக்கிறது. அதனால் தண்ணீர் சுத்தமாக இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

வெயில் நேரத்தில் மேய்ச்சல் வேண்டாம்

வெயில் அதிகமாக அடிக்கும் மதிய நேரத்தில் ஆடுகளை மேய விடும் போது சோர்ந்து விடும். அந்த நேரங்களில் பட்டியில் அடைத்து விட்டு வேலிமசால், முயல் மசால், கோ-4, மாதிரியான பசுந்தீவனங்களை நறுக்கிப் போட வேண்டும். தினமும் வேறு வேறு தீவனங்களை மாற்றி மாற்றிக் கொடுப்பது நல்லது. பகல் மூன்று மணிக்குப் பிறகு  ஐந்தரை மணிவரை மேய்ச்சலுக்கு அனுப்பலாம்.

மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும். ஒவ்வொரு பருவத்துக்கும் போட வேண்டிய தடுப்பூசிகளைக் கட்டாயம் போட்டு வர வேண்டும்.

இரண்டு வருடத்தில் மூன்று ஈற்று எட்டு மாதத்தில் இருந்து ஒரு வருடத்திற்குள் பெட்டை ஆடுகள் பருவத்துக்கு வந்து விடும். அந்த சமயத்தில் நல்ல தரமான கிடாக்களோடு சேர்த்து விட வேண்டும். ஆட்டுக்கு சினைப் பருவம் ஐந்து மாதங்கள். குட்டி போட்ட இரண்டு மூன்று மாதங்களில் அடுத்த பருவத்திற்குத் தயாராகிவிடும்.

எட்டு மாதத்திற்கு ஒருமுறை குட்டி ஈனுவதால், சராசரியாக இரண்டு வருடத்தில் மூன்று முறை குட்டி ஈனும். ஒரு ஈற்றுக்கு இரண்டுக் குட்டிகள் கிடைக்கும். நாற்பது நாட்கள் வரை குட்டிகளை தாய் ஆட்டிடம் பால் குடிக்க விட்டு பிறகு பிரித்துவிட வேண்டும். அப்போதுதான் தாய் ஆடு சீக்கிரம் பருவத்திற்கு வரும்.

sirohi Male goat
சிரோஹி இன கிடாய்

Jamunaparipettaiaadu
ஜமுனாபாரி இன பெட்டை ஆடு

thalaiseri pettai aadu
தலசேரி இன பெட்டை ஆடு


கீழே காணப்படுபவை ஆடுகளுக்காக வளர்க்கப்படும் தீவன வகைகள்: தீவனசோளம், மக்காச்சோளம், வேலிமசால், சீமைபுல் போன்றவை.





நிறையிருந்தால் பாராட்டுங்கள்.. குறையிருந்தால் குறிப்பிட்டுச் சொல்ல உங்களைத் தவிர யார் இருக்கமுடியும்? தயவுசெய்து தங்களின் மேலான கருத்துக்களை இங்கு இடவும்..


வெள்ளாடு வளர்ப்பு

வெள்ளாடு “ஏழைகளின் பசு” என்று அழைக்கப்படுகிறது. இது மானாவாரி நிலம் சார்ந்த பண்ணையத் தொகுப்பின் முக்கிய அங்கம் ஆகும். மேட்டுப்பாங்கான, நிலங்களில் பசுக்களையும், எருமைகளையும் வளர்க்க இயலாது. எனவே இத்தகைய சூழலுக்கு ஆடுவளர்ப்பு உகந்தது. ஆடு வளர்ப்பில் குறைந்த முதலீட்டைக் கொண்டு நல்ல லாபம் பெறலாம்.


யார் தொடங்கலாம்?
  • நிலமற்ற மற்றும் குறுநில விவசாயிகள்.
  • மானாவரி மேய்ச்சல் நிலங்கள் உள்ள இடங்கள்
நன்மைகள்
  • ஆடு வளர்ப்பு அனைத்துச் சூழலுக்கும் ஏற்றதாகும். அதிகப் பராமரிப்பு தேவையில்லை. சிறிய இடம் மற்றும் எளிய கொட்டகை போதுமானது.
  • குறைந்த முதலீடு மற்றும் உடனடி வருவாய்
  • வெள்ளாட்டிலிருந்து பால் மற்றும் கறி ஆகிய இரண்டிலிருந்தும் வருமானம் கிடைக்கிறது.
  • ஒரு ஆட்டிலிருந்து சராசரியாக 22-30 கிலோ கறி கிடைக்கின்றது. அனைத்து விதமான மக்களும் உண்ணக் கூடிய இறைச்சி.
  • அதிகமான குட்டிகளை ஈனும் விகிதம். ஒவ்வொரு முறையும் சராசரியாக 2-3 குட்டிகளை ஈனுகிறது
  • நல்ல எரு கிடைக்கிறது.
  • வருடம்முழுவதும்வேலை
வெள்ளாட்டு இனங்கள்
சிறந்த இந்திய இனங்கள்
ஜம்நாபாரி - எட்டாவா மாநிலம், உ.பி
பீட்டல் - பஞ்சாப்
பார்பரி - உ.பி.யின் மதுரா மற்றும் ஆக்ரா பகுதிகள்
தெல்லிச்சேரி மற்றும் மலபாரி - வடகேரளா
சுர்தி - குஜராத்
காஷ்மீரி - ஜம்மு காஷ்மீர்
வங்காள ஆடு - மேற்கு வங்காளம்
இந்திய சூழலுக்கு ஏற்ற அயல்நாட்டு இனங்கள்
அங்கோரா, ஆல்பைன், சேனன், டோகன் பர்க், ஆங்ளோ நுபியன்

வெள்ளாடு இனங்களை தேர்வு செய்தல்
தலைச்சேரி / மலபாரி
  • வெள்ளை , பழுப்பு மற்றும் கருப்பு நிறங்கள்
  • 2-3 குட்டிகளை போடும் திறன்
  • கிடா - 40-50 கிலோ பெட்டை - 30 கிலோ.
போயர்
  • இறைச்சிக்காக உலகம் முழுவதும் வளர்க்கப்படுகிறது.
  • வேகமான வளர்ச்சி திறன் கொண்டவை.
  • கிடா - 110-135 கிலோ பெட்டை - 90-100 கிலோ.  
  • குட்டிகள் 90 நாட்களில் 20-30 கிலோ இருக்கும்
ஜமுனாபாரி.
  • நல்ல உயரமானவை
  • காதுகள் மிக நீளமனவை
  • ரொமானிய மூக்கமைப்பு கொண்டவை.
  • கிடா 65-85  கிலோ பெட்டை - 45-60 கிலோ.
  • பெரும்பாலான ஆடுகள் ஒரு குட்டியே மட்டும் ஈனும்
  • 6 மாத குட்டிகளின் எடை 15 கிலோ.
  • தினம் 2- 2.5 லிட்டர் பால் கொடுக்கும் திறன்
தலைச்சேரி / மலபாரி
  • வெள்ளை , பழுப்பு மற்றும் கருப்பு நிறங்கள்
  • 2-3 குட்டிகளை போடும் திறன்
  • கிடா - 40-50 கிலோ பெட்டை - 30 கிலோ.
போயர்
  • இறைச்சிக்காக உலகம் முழுவதும் வளர்க்கப்படுகிறது.
  • வேகமான வளர்ச்சி திறன் கொண்டவை.
  • கிடா - 110-135 கிலோ பெட்டை - 90-100 கிலோ.  
  • குட்டிகள் 90 நாட்களில் 20-30 கிலோ இருக்கும்
பெட்டை ஆடுகள்
  • 2-3 குட்டிகள் ஈனும் திறன்
  • 6-9 மாதங்களில் பருவமடையும் தன்மை
கிடாக்கள்
  • தோற்றத்தில் உயரமாகவும், நெஞ்சு பாகம் அகன்றதாகவும், உடல் பாகம் நீண்டதாகவும் இருக்கவேண்டும்
  • 9-12 மாதங்களில் பருவமடையும் தன்மை
  • நல்ல எடையுள்ள குட்டிகளை 6 மாத வயதில் தேர்வு செய்யவேண்டும்
  • 2-3 குட்டிகளை ஈனும் பெட்டையாட்டிலிருந்து
வெள்ளாடுகளை தேர்வு செய்தல்
பெட்டை ஆடுகள்
  • 2-3 குட்டிகள் ஈனும் திறன்
  • 6-9 மாதங்களில் பருவமடையும் தன்மை
கிடாக்கள்
  • தோற்றத்தில் உயரமாகவும், நெஞ்சு பாகம் அகன்றதாகவும், உடல் பாகம் நீண்டதாகவும் இருக்கவேண்டும்
  • 9-12 மாதங்களில் பருவமடையும் தன்மை
  • நல்ல எடையுள்ள குட்டிகளை 6 மாத வயதில் தேர்வு செய்யவேண்டும்
  • 2-3 குட்டிகளை ஈனும் பெட்டையாட்டிலிருந்து
தீவனப் பாரமரிப்பு
  • வெள்ளாடு மேய்ச்சல் மற்றும் அடர்தீவனம் கொண்டு பராமரித்தால் அதிக பட்சம் வளர்ச்சி கிடைக்கும்.
  • கொளுக்கட்டை புல் , ஸ்டைலோ மற்றும் கோ ரகத் தீவன பயிர்களை அளிக்கலாம்.
  • தீவன மர இலைகளான அகத்தி, சூபாபுல், கிளைரிசிடியா போன்றவற்றை வயல் ஓரங்களில் வளர்த்து அளிக்கலாம்.
  • ஒரு ஏக்கரில் வளரும் தீவன மரம் மற்றும் தீவனப் பயிர்களை கொண்டு 15-30 ஆடுகள் வரை வளர்க்கலாம்.
  • அடர் தீவனம் கீழ்கண்டவாறு தயாரிக்கலாம்.
குட்டி தீவனம்
வளரும் ஆட்டு தீவனம்
பால் கொடுக்கும் ஆட்டு தீவனம்
சினை ஆட்டு தீவனம்
மக்காசோளம்
37
15
52
35
பருப்பு வகைகள்
15
37
---
---
புண்ணாக்கு
25
10
8
20
கோதுமை தவிடு
20
35
37
42
தாது உப்பு
2.5
2
2
2
உப்பு
0.5
1
1
1
மொத்தம்
100
100
100
100
  • குட்டிகளுக்கு தினம் 50-100 கிராம் வரை அடர் தீவனம் 10 வாரங்களுக்கு அளிக்க வேண்டும்
  • வளரும் ஆடுகளுக்கு தினம் 100-150 கிராம் வரை அடர் தீவனம் 3-10 மாதங்களுக்கு கொடுக்க வேண்டும்
  • சினை ஆடுகளுக்கு தினம் 200 கிராம் அடர்தீவனம் கொடுக்க வேண்டும்
  • தினம் ஒரு கிலோ பால் கொடுக்கும் ஆடுகளுக்கு 300 கிராம் வரை அடர்தீவனம் கொடுக்கலாம்.
  • அதிகம் தாமிர சத்து உள்ள வெள்ளாடுகளுக்கான தாது உப்பு கட்டிகள் கொட்டிலில் தொங்கவிட வேண்டும்
இனபெருக்கப் பாரமரிப்பு.
  • இலாபகரமாக இருக்க ஆடுகள் 2 வருடத்தில் 3 முறை குட்டிகள் ஈன வேண்டும்
  • வேகமாக வளரும் தன்மை மற்றும் அதிக எடை கொண்ட ஆடுகளை இனபெருக்கத்திற்கு பயன்படுத்தவேண்டும்
  • பெட்டை ஆடுகளை 1 வருட வயதில் இனபெருக்கத்திற்கு பயன்படுத்தவேண்டும்
  • குட்டி போட்ட 3 மாதத்திற்கு பிறகு இனச்சேர்க்கை செய்யவேண்டும். அப்போது தான் 2 வருடத்தில் 3 முறை குட்டிகள் ஈனும்
  • சினை பருவ காலம் 18-21 நாட்கள் இடைவெளியில் வரும். அது 24-72 மணி காலம் நீடிக்கும்.
  • சினை பருவ காலத்தில் பெட்டை ஆடுகள் வலி இருக்க மாதிரி ஓங்கி கத்தும். மேலும் வாலை ஆட்டி கொண்டிருக்கும். இனப்பெருக்க உறுப்புகள் சிறிது வீங்கியும் சிவந்தும் காணப்படும். இனப்பெருக்க உறுப்பிலிருந்து திரவம் ஒழுகவதால் வாலை சுற்றி ஈரமாகவும் அழுக்காகவும் காணப்படும்.சில ஆடுகள் தீனி திங்காமலும் சிறுநீர் அடிக்கடி கழித்து கொண்டு இருக்கும். சில சமயங்களில் மற்ற ஆடுகள் மீது ஏறும் அல்லது ஏற அனுமதிக்கும்
  • சினை பருவ அறிகுறிகள் தென்பட்ட 12-18 மணி நேரத்தில் கிடாவுடன் சேர்க்கவேண்டும்.
  • சில ஆடுகளில் சினைபருவ காலம் 2-3 நாட்கள் இருக்கும் எனவே அவற்றை இரண்டாவது தடவையாக 1 நாட்கள் கழித்து மீண்டும் கிடாவுடன் சேர்க்கவேண்டும்
  • சினை காலம் 145-150 நாட்கள்
குடற் புழு நீக்கம்
  • ஒல்லியான மற்றும் பொலிவற்ற தோற்ற கொண்ட ஆடுகளில் குடற் புழு தாக்கம் இருக்கும். எனவே அந்த ஆடுகளை இனபெருக்கத்திற்கு முன் குடற் புழு நீக்கம் செய்யவேண்டும்.
  • சினை ஆடுகளை முதல் 2 மாத சினையில் குடற்புழு நீக்க செய்தால் கரு சிதைவு ஏற்பட வாய்ப்புண்டு.
  • சினை ஆடுகளை குட்டி போடுவதற்கு 2-3 வாரத்திற்கு முன் குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும்.
  • குட்டிகள் பிறந்த 30 நாட்களிலும் பிறகு 60 நாளிலும் குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும்
தடுப்பூசிகள்
  • துள்ளுமாரி நோய் மற்றும் டெட்னஸ் தடுப்பூசிகளை குட்டி போடுவதற்கு 4-6 வாரத்திற்கு முன்னும், இனபெருக்கத்திற்கு 4-6 வாரத்திற்கு முன்னும் போடவேண்டும்.
  • துள்ளுமாரி நோய் மற்றும் டெட்னஸ் தடுப்பூசிகளை குட்டிகளுக்கு பிறந்த 8 வது வாரமும், பிறகு 12 வது வாரமும் போடவேண்டும்.
  • கிடாக்களுக்கு வருடம் ஒரு முறை துள்ளுமாரி நோய் மற்றும் டெட்னஸ் தடுப்பூசிகளை போடவேண்டும்
கொட்டகை பாரமரிப்பு
1.ஆழ்கூள முறை
  • தரையில் 6 செ.மீ. உயரத்திற்கு கடலைப்பொட்டு, மரத்தூள் மற்றும் நெல் உமி ஆகியவற்றை இட்டு வளர்க்கலாம்.
  • இரண்டு வாரத்திற்கு ஒரு முறை புது கூளம் போடவேண்டும்.
  • இம்முறையில் உண்ணி மற்றும் பேன் தாக்கம் இல்லாமல் கவனித்துக் கொள்ளவேண்டும்
  • ஆடு ஒன்றுக்கு 15 சதுர அடி இடம் தேவைப்படும்
2.உயர் மட்ட தரை முறை
  • தரையிலிருந்து 3-4 அடி உயரத்தில் மர பலகை அல்லது கம்பி வலைகளை கொண்டு அமைக்கலாம்
  • ஒட்டுண்ணி தொல்லைகள் மிகவும் குறைவாக இருக்கும்

      வளர்ப்பு முறைகள்
      1.மேய்ச்சலுடன் கூடிய கொட்டகை முறை.
      • மேய்ச்சல் நிலங்கள் குறைவாக உள்ள இடங்களில் மேய்ச்சலுக்கு பிறகு கொட்டகையில் வைத்து பசுந்தீவனங்களையும், அடர் தீவனைத்தையும் அளிக்கலாம்.
      2.கொட்டகை முறை.
      • வெள்ளாடுகளை நாள் முழுவதும் கொட்டகைக்கு உள்ளேயே அடைத்து தீவனம் அளித்து வளர்க்கப்படுகிறது.
      • கொட்டகையை ஆழ்கூளம் அல்லது உயர் மட்ட தரை முறையினால் அமைக்கலாம்
      வெள்ளாடு காப்பீடு திட்டம்
      • நான்கு மாதம் வயது முதல் வெள்ளாடுகளை பொது காப்பீடு நிறுவனங்கள் மூலம் காப்பீடு செய்யலாம்.
      • விபத்து மற்றும் நோயினால் இறந்தால் காப்பீடு தொகையை கோரலாம்

       
      நிறையிருந்தால் பாராட்டுங்கள்.. குறையிருந்தால் குறிப்பிட்டுச் சொல்ல உங்களைத் தவிர யார் இருக்கமுடியும்? தயவுசெய்து தங்களின் மேலான கருத்துக்களை இங்கு பகிர்ந்து கொள்ளவும்.
                                                                                                                                        கமருதீன்

    Thursday 20 September 2012

    பல மொழிகளில் குர்ஆன் மென்புத்தகம் - தமிழிலும்

    பல மொழிகளில் குர்ஆன் மென்புத்தகம் - தமிழிலும்

    QuranDownloadLogo


     QURAN DOWNLOAD E-BOOK tamil quran free download | download free quran tamil | download free quran any language | how to download
    quran | why download quran | how download tamil quran pdf | free download tamil e-book quran |
    இணையத்தில் உலா வரும் போது ஒரு நல்ல தளத்தை பார்த்தேன் . 
    அதை தான் இங்கு பகிர்ந்து கொள்ள போகிறேன் . இஸ்லாமியர்களின் புனித நூலான திருகுர் ஆன் . பல செம்மையான கருத்துக்களையும் வாழ்க்கை நெறிகளையும் போதிக்கும் குர்ஆன் அனைவருக்கும் பயன்படும் விதத்தில் அமைய பெற்றது .   

    50-ற்க்கும் மேற்பட்ட மொழிகளில் திருகுர்ஆனை ,குறிப்பாக உலகின் முக்கிய மொழிகளில் வழங்கி வருகிரது . மேலும் கிடைக்கிறது . 



    http://www.qurandownload.com/


    தமிழில் திருகுர்ஆனை தரவிறக்கம் செய்ய கீழே சொடுக்கவும் .



    மலையாளத்தில் 

    pdfMalayalam Quran T1.pdf



    pdfMalayalam Quran T2.pdf

    தமிழில் குர்ஆனை படிக்க இந்த தளத்தையும் பயன்படுத்தலாம் .


    தமிழில் குர்ஆன்
     மேலும் சிலதளங்கள் :
    மொபைலில் குர்ஆன் :



    இந்த மென்புத்தகம் அனைவருக்கும் பயனுள்ள விதமாய் இருக்கும் என்று நினைக்கிறேன் .குறிப்பாக இஸ்லாமிய நண்பர்களுக்கு பயனுள்ளதாய் இருக்கும் . 


    உங்கள் பின்னூட்டங்கள் வரவேற்க படுகிறது .

    நன்றி ...

    முக்கிய செய்திகள் – Google செய்திகள்

    வெற்றியின் ரகசியம்...

    வெற்றியின் ரகசியம்...... என் நேரமும் அதைப்பற்றியசிந்தனையும், அதர்க்கேற்ற உழைப்பும்,................... அன்பு கமருதீன்