b

அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Wednesday 26 September 2012

கிராமத்து விளையாட்டுகள்

தளிர்கள் விளையாட்டுக்கள்***
நண்பர்களே !
நான் சிறுவயதில் விளையாடிய விளையாட்டுக்கள் ஞாபகம் இருந்த வரையில் இங்கு
எழுதுகிறேன். இதே விளையாட்டுக்கள் ஊருக்கு ஊர் மாறுபட்டிருக்கலாம் இல்லை
மருவியிருக்கலாம். தெரிந்தவர்கள் இங்கு இட்டால் மகிழ்ச்சி.


விளையாட்டுக்கள் வீட்டினுள் விளையாடுவது ஒரு வகை. வீட்டிற்கு வெளியே சென்று
ஆடுவது மற்றொன்று. (indoor / outdoor games). சிறுபிள்ளைகள் (ஆண்,
பெண்)அனைவருமாய் ஆடிய விளையாட்டுக்களில் எனக்கு ஞாபகத்தில் நின்ற, சிறு சிறு
விளையாட்டையும் தருகிறேன் கீழே.. பின் ஒவ்வொன்றை பற்றியும் விலாவாரியாக
பேசுவோம்.

வீட்டினுள் ஆடும் ஆட்டங்களில்

1.தாயம், சோவி
2.பல்லாங்குழி
3. ஆடுபுலிஆட்டம்
4.மூன்றுகல் ஆட்டம்
5.செப்புசாமான்
6.கூட்டாஞ்சோறாக்கல்
7.தத்தைக்கா..
8.சங்கு சக்கரம்
9.பருப்புகட
10.கள்ளன் போலீஸ்
11.கிச்சு கிச்சு தாம்பலம்
12.உருண்டை...
13.தட்டாங்கல்
14.ஜோடி சேர்த்தல்( வளையல் துண்டுகளால்)
15.புத்தக கிரிக்கெட்
16.என்ன பிடிக்கும் (வார்த்தை விளையாட்டு)
17.எழுத்து கண்டுபிடித்தல்
18.கட்டம் நிரப்புதல்
19.நாடு பிடித்தல்
20.சீட்டு கட்டு
21.பெயர் நிரப்பல்
22.கொக்கு பறபற
23.மூக்குபொடி
24.குத்துவிளையாட்டு.
25.அக்கக்கா சினுகோலி

இப்படி சில வீட்டிற்கு வெளியே

1.கண்ணாமூச்சி (இதிலே பல வகை உண்டு பல பாட்டும் உண்டு.)
2.கபடி
3.பாண்டி
4.காதுல பூ சொல்லி
5.பூ பறிக்க வருகிறோம்
6.ஒரு கொடம் தண்ணியெடுத்து (விளையாட்டின் பிரத்யோக பெயர் மறந்தபடியால் அதன்
முதல் வார்த்தையை இடுகிறேன்)
7.பாட்டியும், ஊசியும்
8.தோசை வார்த்தல்
9.கொக்கோ
10.நொண்டி
11.பச்சைக்குதிரை
12.எரிபந்து
13.கோலி
14.கிட்டிபுள் (அ) குச்சி-கம்பு
15.கவட்டபுள்
16.பட்டம்
17.காத்தாடி
18.தட்டான் பிடித்தல்(கிராமத்தில் தட்டான், ஓணான் பிடிப்பதெல்லாம் சகஜம்)
19.டயர் (சைக்கிள் டயர்) ஓட்டுதல்
20.நுங்கு வண்டி
21.பேருந்து விளையாட்டு
22.எட்டாங்கோடு
23.சோடா போடுதல்
24.மாட்டுவண்டி
25.கயராட்டம் (ஸ்கிப்பிங் வகையறா)
26.கள்ளன் போலீஸ்
27.பந்தாட்டம்
28.தொட்டுபுடிச்சி
29.ஓட்டப்பந்தயம்
30.நீச்சல் (தண்ணீர் ஆட்டம்)
31.களிமண் பொம்மை செய்தல், மணல் விளையாட்டுகள்
32.பெயர் எழுதுதல் (வேம்பங்கொட்டை பால் கொண்டு)
33.ஊஞ்சல், ஆலமரவிழுது ஊஞ்சல்
34.தென்னை வண்டி
35.கல்லா மண்ணா
36. உஸ்தி


இன்னும் நான் மறந்தவை நிறைய இருக்கலாம். அனைத்துமே விளையாடியது கனவாகி போனது
இப்போது. இத்தனை ஆட்டங்கள் இருக்க, இப்போதைய குழந்தைகள் ஏனோ தொலைக்காட்சி,
வீடியோ விளையாட்டு, என்று இருக்கையில் இதை பற்றி அவர்கள் அறிந்து கூட இருக்க
மாட்டார்களே என்ற கவலையில் தோன்றியது தான் இந்த கட்டுரை. அப்போழுதும் செஸ்,
கேரம்போர்ட் என இருந்தாலும் குழந்தைகளால் பெரிதும் விரும்பப்பட்ட விளையாட்டுகள்
இவை என்று தான் தோன்றுகிறது. இந்த விளையாட்டெல்லாம் தெருவில் ஆட பள்ளியில்
கொக்கோ, அனைத்து பந்து விளையாட்டுக்கள், செஸ், ஷட்டில் கார்க், முயுசிக்கல்
சேர், கேரம், ரிங்க் என அனைத்து விளையாட்டுகளும் இருந்தது. நான் கண்ட இந்த
விளையாட்டுக்கள் மறக்காமல் இருக்கவும் அழிந்துவிட கூடதென்ற ஆதங்கத்திலும் எழுத
விழைகிறேன். இனி ஒவ்வொன்றாய் பார்க்கலாம்.

சிறுமியர் விளையாட்டுக்கள்
"தென்காசி வட்டாரத்தில் தட்டாங்கல், பல்லாங்குழி, பூப்பறிக்க வருகிறோம், பாட்டி பேத்தி, அல்லி மல்லி தாமரை, செங்கல் எடுத்துச் சிறு வீடு கட்டு, டில்லி அக்கா தண்ணிக்குள்ள, அக்கக்கா கிளி செத்துப் போச்சு, உருண்டை உருண்டை கல்லெடுத்தல், குளத்துக்குள்ள கரை மேல, கீ கீ ரோஜா, ஈஞ்சக்காத்தண்ணி இறைப்பேன், ஒரு குடம் தண்ணி எடுத்து ஒரு பூப் பூத்தது, கிச்சு கிச்சுத் தாம்பாளம், வெத்தலப் பெட்டியைக் காணல, வளையல் விளையாட்டு, பானை சட்டி, நொண்டி, ஆபத்துக்கு கை கொடுத்தல், பூச்சொல்லி விளையாட்டு, சூடு சூப்பி, துணி துவைத்தல், அக்கக்கா சிணுக்கோரி, மெல்ல வந்து கிள்ளிபோ ஆகிய சிறுமியர் விளையாட்டுக்கள் கண்டறியப்பட்டுள்ளன."


= சிறுவர் விளையாட்டுக்கள்
  • கால் தூக்கிக் கணக்குப் பிள்ளை
  • ஆவியம்
  • பம்பரம் விளையாட்டு
  • தவிட்டுக் குஞ்சி
  • கிளித் தட்டு
  • தெல்லு
  • கிந்தான்
  • சைக்கிள் கிந்தான்
  • ஆயிரம் கிந்தான்
  • உப்பு விளையாட்டு
  • கள்ளன் போலீசு
  • கோலி
  • வண்ணாம் பொதி
  • கிட்டிப்புள்
  • மந்தி ஓடுதல்
  • பந்து விளையாட்டு
  • மாக்கொளக் கட்டை
  • ஒச்சிய்யான்
  • தலைவனைக் கண்டுபிடித்தல்
  • உருண்டை திரண்டை
  • மாட்டுக்கல் திரி
  • தேர் விளையாட்டு
  • மாட்டு விளையாட்டு
  • குருட்டுக் கொக்கு
  • ஐஸ்பால் ரெடி
  • கல்லெடுக்கும் விளையாட்டு
  • காற்றாடி
  • பட்டம்
  • சூடிசுப்பி
  • ஓத்தையா? ரெட்டையா?
  • தைத்தக்கா கதை
  • வட்டத்திரி
  • எலியும் பூனையும்
  • காக்காக் குஞ்சு
  • குண்டு விளையாட்டு
  • ஆடு - ஓநாய் விளையாட்டு
  • சில்லு விளையாட்டு
  • ஆனைத்திரி பூனைத்திரி
  • காட்டு கண்ணாமூச்சி

சிறுமியர் விளையாட்டுக்கள்

  • பூப்பறிக்க வருகிறோம்
  • பூசணிக்காய் விளையாட்டு
  • உன் புருசன் பெயரென்ன?
  • பூச்சொல்லி விளையாட்டு
  • ஒருபத்தி இருபத்தி
  • குச்சு குச்சு ராக்கம்மா
  • சோற்றுப்பானை விளையாட்டு
  • சுழற்சிக்காய் விளையாட்டு
  • திருத்திரி மொம்மக்கா
  • ரானா மூனா தண்டட்டி
  • என் தலைக்கு எண்ணெய் ஊத்து
  • கரகர வண்டசிறுவர் சிறுமிய விளையாட்டுக்கள்
  • நொண்டி
  • நிலாப் பூச்சி
  • கிறுகிறு மாம்பழம்
  • சாட்டு பூட்டு
  • கண்ணாமூச்சி
  • ஒரு தலையிலே ஆடு மேயுதாம்
  • யாருக்கு வேட்டை?

மகளிர் விளையாட்டுக்கள்

  • பல்லாங்குழி
  • தட்டாங்கல்
  • தாயம்

ஆடவர் விளையாட்டுக்கள்

  • சடுகுடு
  • பதினைஞ்சாம் புலி
  • உறியடி
  • சேவல் கட்டு
  • எருது கட்டு

== மேலும் குறிப்புகள் ==
கோலிகுண்டு, பம்பரம், சில்லாக்கு, பாண்டி, ஒத்தையா ரெட்டையா, சொட்டாங்கல்லு, பூப்பறிக்க வருகிறோம், காலாட்டுமணி கையாட்டுமணி, எறிபந்து, கொலகொலயா முந்திரிக்கா, பச்சக்குதிர தாண்றது, ஓடிப்புடிச்சு ஒளிஞ்சுபுடிச்சு, தாயம், பரமபதம், ஆடுபுலியாட்டம், பல்லாங்குழி, கல்லா மண்ணா, டியாண்டோ டியாண்டோ, திருடன் போலீஸ், தீப்பெட்டிப்படம் சேக்கிறது, சடுகுடு, கிட்டி (கில்லி), எருவாட்டி, கண்ணாமூச்சி, கிறுகிறுவானம், ரயில்வண்டி, நொங்குவண்டி டயர்வண்டி ஓட்றது, குச்சி விளையாட்டு (சிலேட்டு குச்சிதான்), குலுக்குச்சீட்டு என இளமை பூராம் விளையாடித் திரிந்ததால் இன்றுவரை விளையாட்டாய் இருக்கிறது வாழ்க்கை.

கனவாகி வரும் கண்ணாமூச்சி விளையாட்டு

விளையாட்டுக்கள் வீட்டினுள் விளையாடுவது ஒரு வகை. வீட்டிற்கு வெளியே சென்று ஆடுவது மற்றொன்று.
ஆடுபுலி ஆட்டம், கபடி, சல்லிக் கட்டு, உறியடி, வழுக்கு மரம், சிலம்பாட்டம், வண்டிப் பந்தயம். கால்தூக்கிக் கணக்குப் பிள்ளை, பந்து, பச்சைக் குதிரை, பம்பரம்,
புளியங் கொட்டை, கபடி, கள்ளன் போலீஸ் இவை சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான விளையாட்டு
பல்லாங்குழி, தாயம், சில்லுக் கோடு, தட்டா மாலை, கும்மி,
கோலாட்டம், பாண்டி, கண்ணா மூச்சி, பூசணிக்காய், குலைகுலையா முந்திரிக்காய், எலியும் பூனையும், ஒரு குடம் தண்ணி ஊத்தி, பூப்பறிக்க வருகிறோம், கரகர வண்டி, சில்லுக் கோடு, பூப்பறிக்க வருகிறோம், கிச்சுக்
கிச்சுத் தாம்பாளம், பல்லாங்குழி, கொழுக்கட்டை, நொண்டி இவை சிறுமியர்கள் மற்றும் குமரிப்பெண்களுக்கான விளையாட்டு. இளமைக்காலம் முழுவதும் விளையாடித் திரிந்ததால்தான் நமக்கு இன்றுவரை விளையாட்டாய் இருக்கிறது வாழ்க்கை.
நாட்டுப்புறங்களில் 126 வகை விளையாட்டுக்கள் விளையாடப்பட்டதாக வரலாற்றுக்குறிப்புகள் தெரிவிக்கின்றன. இவற்றில் கண்ணாமூச்சி, உருண்டை திரண்டை, அந்தக் கழுதை இந்தக் கழுதை, கல்லுக் கொடுத்தான் கல்லே வா, ராஜா மந்திரி, பருப்புக் கடைந்து, அத்தளி புத்தளி, கில்லாப் பறண்டி, அக்கக்கா கிளி செத்துப்போச்சு, சீப்பு விக்கிது. தொட்டுப் பிடிச்சு, ஐஸ் பால் போன்ற விளையாட்டுகள் ஒரே குழுவாக விளையாடும் விளையாட்டுகளாகும். இந்த விளையாட்டுகளில் தாய்ச்சி எனப்படும் தலைவர் ஒருவர் இடம் பெற்றிருப்பார்.
மெல்லவந்து மெல்லப்போ, பூச்சொல்லி போன்ற விளையாட்டுகளில் இரு உத்திதார் இருக்கிறார்கள். இவை அணி பிரிந்து விளையாடும் விளையாட்டுகள். குழுவாக பிரிந்து விளையாடும் சில விளையாட்டுக்களில் உத்திதாய்ச்சி எனப்படும் துணைத்தலைவர் இடம்பெற்றிருப்பார்.
கண்ணாமூச்சி
கண்ணாமூச்சி விளையாட்டில் தலைவராக கருதப்படுபவர், குழுவில் இருந்து ஒருவரை தேர்ந்தெடுக்கிறார். அவரை பட்டவர் என்று கூறுகின்றனர். அவரது கண்ணினை, தலைவர் மூடிக்கொள்ள, மற்ற குழந்தைகள், ஓடி ஒளிந்து கொள்வர். அவர்கள் ஓடி ஒளிந்து கொள்ளும் நேரத்தில் தலைவரானவர்
“கண்ணா மூச்சி ரேரே…
காரே முட்டே ரே ரே …
ஒருமுட்டையை தின்னுபுட்டு….
ஊளை முட்டைய கொண்டுவா ….” என்று பாடுவார்.
பாடல் முடிந்தவுடன் தலைவர் அந்த நபரின் கண்களைத் திறந்து விடுவார். ஒளிந்திருக்கும் குழந்தைகளை அந்த நபர் தேடிக்கொண்டு போகும் போது அவரிடம் சிக்கியவர் அவுட்டாகிறார். இதன் பின்னர் அவுட்டான நபரின் கண்கள் மூடப்படும். மீண்டும் விளையாட்டு தொடரும். தேடும் நபரிடம் அகப்படாமல் குழந்தைகள் அனைவரும் தலைவரை தொட்டுவிட்டால் அவர்கள் பழமாவார்கள். இதுபோன்ற சுவாரஸ்யமான விளையாட்டுகளை எல்லாம் கிராமங்களில் காண முடிவதில்லை என்பதுதான் வேதனை. சிறுவர்களின் உலகத்தை இப்பொழுது கார்டூன் சேனல்களும், வீடியோ விளையாட்டுக்களும் ஆக்கிரமித்துக் கொண்டிருப்பதால் நாட்டுப்புறவிளையாட்டுக்களை இனி கதைகளில் மட்டுமே படிக்கவேண்டியிருக்கும்.


கிராமத்து விளையாட்டுகள்


ஆபியம் ,,,,,,,,,,,

,இச்டாபியம் ,,,,,,,,,,,
லாகரசிய கொக்கு
லாகரசிய மன்ன தொடு,,,,,,,,,
சரா சரி உதை குடு ,,,,,,,,,,
ஒருவன் குனிய வேண்டும் மற்றவர்கள்
இந்த மந்திரத்தை சொல்லி தாண்டவேண்டும் ,,,,,
சரா சரி உதை குடுக்கு குடுப்போம் பாருங்கள்
உதை குனிதவனுக்கு கும்மா குத்துதான் ,,,,,,,,போங்க

பம்பரம் ,,,,,,,,,,,,

முதலில் வட்டம் போடுவோம்
இதில் எத்தனை பேரு வேணாலும்
கலந்துகொல்லாம் ,,,,,,,,,பம்பரத்தில் சாட்டையை சுத்த கூடாது ஒன்று ரெண்டு முனு சொன்னவுடன் பம்பரத்தில் சுத்தி அதை முதலில் யாரு யாரு அபிட் எடுகிரர்களோ அவர்கள்
பம்பரம் தப்பித்தது ,,,,,
கடைசில் அபிட் எடுத்தவன் பம்பரம் வட்டத்தில் சிக்கும்
அதை ,,,,,,,,,வட்டத்தில் இருந்து வெளிய வரவரைக்கும் அந்த பம்பரம் ,
சொறி நாயிகிட்ட கடி பட்ட போல போயுடும் ,,,,,,,,
மீண்டும் மீண்டும் அதிக உக்கு வாங்கும் பம்பரம் அருவாளால் வெட்டப்படும்

கிட்டி புல்லு ,,,,,,,,

இதில் இரட்டை அடி
மூன்றடி ,,,,,,,,,,
லாங் சாட் ,,,,,,,,,,

கவ குச்சி ,,,,,,,,

மூங்கில் குச்சி ,,,,,,,,,,கவயோடு வெட்டி,,,
அதை ஒவ்வரும் ஒன்னு ஒன்னு வைத்திருப்போம் ,,,
இதை வயலில் தான் விளையாடுவோம்
இந்த விளையாட்டில் ,,,,,,,,,,,கல்லு ,மாட்டு சாணி,, பேப்பேர் ,,,,இந்த விளையாட்டில் இடம் உண்டு
கவகுச்சியை ஒருவன் தன் முதுகுக்கு பின்னால் தூக்கி பிடிக்க வேண்டும் ,,,
மற்றொருவன் அதை அவன் குச்சியால் அதை தட்டி விட வேண்டும்
அவன் திரும்புவதற்கு குள் அந்த கவ குச்சி பல கைகள் மாறிவிடும்
அவன் நம்மை தொட வரும்போது ,,,,,,,,,மேலே சொன்ன ,,,கல்லு ,மாட்டு சாணி,, பேப்பேர்
இதில் எதாவது ஒன்றில் நம் கவகுச்சியை வைத்துவிட்டால் நாம் தப்பித்து விடுவோம்
சில பேர் கவகுச்சியை ஆறு கிலோ மீட்டர் வரை தள்ளிக்கொண்டு போயிருக்கிறோம்

100குச்சி ,,,,,,,,,,,,

இதை திண்ணையிலோ
முத்தத்திலோ ஆடுவோம் ,,,,,,,,,,
10 விளக்கமாறு குச்சியை ,,,
பாதி பாதிய உடைத்து கொள்வோம்
ஒரே ஒரு குச்சி மட்டும் பெரியதாக இருக்கும்
பத்து குச்சி யை தரையில் போடுவோம்
முதலில் ஒரு குச்சியை மட்டும் அலங்கமல் எடுக்க வேண்டும்
அலங்கினால் தோற்றுவிடுவோம் ,,,,,,,,,அந்த ஒரு குச்சியால்
ஒன்பது குச்சியை எடுக்கவேண்டும் எடுத்தவன் வெற்றி ,,,

5.4 ஆடவர் விளையாட்டுகள்
தனி     நிலையிலும் குழு நிலையிலும் அமைந்த புற விளையாட்டுகளாக
ஆடவர் விளையாட்டுகள் அமைந்துள்ளன. உடல் திறன், அறிவுத்
திறன், வீரப் பண்பு ஆகிய மூன்று கூறுகளில் ஏதேனும் ஒன்றை
அடிப்படையாகக் கொண்டு இவ்விளையாட்டுகள் ஆடப் படுகின்றன.
போட்டி மனப் பான்மையைத் தூண்டுபவையாகவும் வெற்றி தோல்வியை
நிர்ணயிக்கும் வாய்ப்பு நிலை விளையாட்டுகளாகவும் உள்ளன. ஒரு
சமுதாயத்தில் போட்டி விளையாட்டுகள் அதிக எண்ணிக்கையில்
காணப்பட்டால் அது அந்தச் சமுதாயத்திற்குச் சிறப்புச் சேர்க்கும் என்று
கூறுவதுண்டு. ஏனையோர் ஆடும் விளையாட்டுகளை விட ஆடவர்
விளையாட்டுகளில் பார்வையாளர் மிகுதி. ஆடவர் இருவராகவோ, இரு
அணிகளாகவோ பிரிந்து ஆடும் நிலையில் பார்வையாளர்களும் இரு
அணியினராகப் பிரிந்து, ஆடுவோருக்கு உற்சாக மூட்டுவதைக்
காணலாம்.
கபடி,     சிலம்பம், சல்லிக் கட்டு, உறியடி, வழுக்கு
மரம், வண்டிப் பந்தயம், புலியாட்டம், ஆடுபுலியாட்டம்,
மான்கொம்பாட்டம், சுருள்கத்தி சுழற்றுதல், வடம் இழுத்தல்
போன்ற விளையாட்டுகள் ஆடவர் விளையாட்டுகளாக நாட்டுப்புற
மக்கள் மரபில் இன்றும் ஆடப்பெற்று வருகின்றன.
கபடி விளையாட்டு
சடுகுடு,     பலிஞ்சடுகுடு, கபடி என்றெல்லாம் கபடி விளையாட்டு
அழைக்கப்படுகிறது. இது இளைஞர்களும், சிறுவர்களும் விரும்பி ஆடும்
போட்டி விளையாட்டு ஆகும்.
கிராமத்து     மந்தைகளிலும் ஆற்று மணலிலும் இவ்விளையாட்டு
ஆடப்படும். இது விதிமுறைகளுடன் கூடிய விளையாட்டு ஆகும்.
ஆடுவோர் இரு அணியினராகப் பிரிந்து அணிக்கு ஏழு பேராகவோ,
ஒன்பது பேராகவோ, சேர்ந்து ஆடுவர். பாடிச் செல்வது கபடி
விளையாட்டின் அடிப்படையாகும். முதல் அணியைச் சேர்ந்தவர் பாடிக்
கொண்டே இரண்டாம் அணியினர் இருக்கும் பகுதிக்குச் சென்று,
ஒருவரையோ, இருவரையோ தொட்டு வெளியேற்றி வரவேண்டும்.
அதேபோல் இரண்டாம் அணியினரும் செய்ய வேண்டும். எந்த அணி
அதிகப் புள்ளிகள் எடுக்கின்றதோ அது வெற்றி பெற்றதாகக்
கருதப்படும். கபடி விளையாட்டு இன்று உலகம் முழுவதும் பரவி
ஒலிம்பிக்கில் இடம்பெறும் அளவிற்கு வளர்ச்சி பெற்றுள்ளது.
எல்லைக்கோடு
ஏறுகோடு
நடுக்கோடு
ஏறுகோடு
எல்லைக்கோடு

கபடிப் பாடல்கள்
நாந்தான் வீரன்டா
நல்லமுத்து பேரன்டா
வெள்ளிச் சிலம்பெடுத்து
விளையாட வாரன்டா
தங்கச் சிலம்பெடுத்துத்
தாலிகட்ட வாரன்டா
சடுகுடு சடுகுடு சடுகுடு
சடுகுடு.
கீத்து கீத்துடா
கீரைத் தண்டுடா
நட்டு வச்சன்டா
பட்டுப் போச்சுடா
போச்சுடா போச்சுடா.....

சிலம்பாட்டம்
தமிழக     நாட்டுப்புற மக்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றாக
விளங்கும் கருவி விளையாட்டு சிலம்பாட்டம் ஆகும். சிலம்பு
விளையாட்டு, குச்சி விளையாட்டு, கம்பு விளையாட்டு, சிலம்புக்கலை
என்றும் இது வழங்கப்படும். சிலம்பு என்பதற்கு ஒலித்தல் என்று
பொருள் உண்டு. கம்புகளை மாறிமாறி அடித்து ஒலி எழுப்புவதால்
சிலம்பம், சிலம்பாட்டம் எனப்பெயர் பெற்றது எனலாம். இது தற்காப்புக்
கலையாகவும் போர்க் கலையாகவும் விளங்குகிறது. சிலம்பாட்டத்தைக்
கற்றுக் கொள்ளக் குறைந்தது ஆறு மாதக் காலம் ஆகும். சிலம்பாட்டம்
கற்றுக் கொடுக்கச் சிலம்பாட்டக் கழகங்கள் பல தமிழகத்தில் உள்ளன.
சிலம்பாட்டம் ஆடுவதற்குக் குறைந்தது இருவர் வேண்டும். நன்கு
பயிற்சி பெற்ற ஆட்டக்காரர்கள் சிலம்பாட்டம் விளையாடும் போது,
பார்ப்பதற்கு ஆர்வமாகவும் வியப்பாகவும் இருக்கும். ஆண்கள்,
பெண்கள் என்று இருபாலரும் இன்று சிலம்பாட்டத்தைக் கற்று
விளையாடி வருகின்றனர்.
பொங்கல்     திருவிழா, கோயில் விழாக்கள், ஊர்வலங்கள் இவற்றில்
சிலம்பாட்டம் தவறாது இடம் பெறும்.
வழுக்கு மரம்
 
ஆடவரின்     உடல் திறனைச் சோதிப்பது வழுக்கு மரம்விளையாட்டு ஆகும். நன்கு வழுவழுப்பாகச் செதுக்கப்பட்ட
உயரமான மரம் நடப்படும் அதனை மேலும் வழுவழுப்பாக்கப்
பலவிதமான எண்ணெய்கள் திரும்பத் திரும்பத் தடவப்படும்.
மரத்தின் உச்சியில் பண முடிப்பு வைக்கப்படும். வழுக்கு மரத்தில்
ஏறி அந்தப் பண முடிப்பை எடுக்கும் திறன் உள்ளவர் யார்
என்பதைக் கண்டறிவதுதான் போட்டி. அவ்வளவு எளிதாக அந்தப்
பண முடிப்பை     எடுத்துவிட முடியாது.    இளைஞர்கள்
முண்டியடித்துக் கொண்டு இப்போட்டியில் கலந்து கொள்வார்கள்.
ஊர் மக்கள் அனைவரும் திரண்டு மகிழ்ச்சி ஆரவாரத்தோடு
இவ்விளையாட்டைக் கண்டு களிப்பார்கள். வழுக்கு மரத்தில்
ஏறிப் பண முடிப்பை எடுக்கும் இளைஞர் சிறந்த வீரராகக்
கருதப்படுவார். அவருக்கு மேலும் பணமும் பாராட்டுகளும்
கிடைக்கும். தெய்வ வழிபாட்டின் ஒரு பகுதியாகக் கிராமப்
புறங்களில் இவ்விளையாட்டு நடத்தப்படும்.
ஆடுபுலி ஆட்டம்
ஆடவரால்     விளையாடப்படும் வரைபட ஆட்டம் ஆடுபுலி
ஆட்டம்
ஆகும். இது பதினைந்தாம் புள்ளி என்றும்
வழங்கப்படும். அறிவுத் திறனை வளர்க்கக் கூடிய இந்த
விளையாட்டிற்கு இருவர் வேண்டும்.
ஒருவர்     ஆடுகளின் சார்பாகவும், ஒருவர் புலியின் சார்பாகவும்
விளையாட வேண்டும். மண் தரையிலோ அல்லது கல், சாந்துத்
தரையிலோ ஆட்டத்திற்குரிய வரைபடத்தை வரைந்து கொள்ள
வேண்டும். ஆடுகளின் சார்பாக விளையாடுபவர் பதினைந்து
காய்களையும் (கற்கள் அல்லது புளியங் கொட்டை) புலியின் சார்பாக
விளையாடுபவர் மூன்று காய்களையும் வைத்துக் கொள்ள வேண்டும்.
இப்பொழுது     ஆடுகளுக்குரிய காய்களை வைத்துக் கொண்டே
வரவேண்டும். அப்பொழுது புலி ஆடுகளி்ன் இருப்பு முறைக்கேற்ப
நகர்ந்து கொண்டும் ஆடுகளை வெட்டிக் கொண்டும் வரும். புலி நகர
முடியாத அளவிற்கு ஆடுகள் சுற்றி வளைத்துக் கொண்டால் புலி
தோற்றதாகக் கருதப்படும். ஆடுகள் அனைத்தையும் புலி
வெட்டிவிட்டால் புலி வெற்றி பெற்றதாகக் கருதப்படும். ஆடுவோரின்
திறமையைப் பொறுத்து ஆட்டத்தின் காலம் நீளும்.
அறிவுக்     கூர்மைக்கும் சிந்தனையை ஒருமுகப் படுத்துவதற்கும்
இவ்விளையாட்டு சிறந்த பயிற்சியாகும். இந்தோனேசியா, இலங்கை,
மலேசியா போன்ற நாடுகளிலும் இவ்விளையாட்டு உள்ளது குறிப்பிடத்
தக்கதாகும்.
5.4.1 உடல் திறன் விளையாட்டு
ஆடவரின்         உடல்     அமைப்பு     வலிமையானதாகவும்
உறுதியுடையதாகவும் அமைந்திருப்பதால் அதற்கேற்ற வகையிலேயே
விளையாட்டுகளும்     வடிவமைக்கப்     பட்டுள்ளன.     ஆடவர்
விளையாட்டுகளில் உடல் திறனை வெளிக்காட்டும் வகையில் அமைந்த
விளையாட்டுகளே மிகுதி, கபடி, சிலம்பாட்டம், உறியடி, வழுக்கு மரம்,
வடம் இழுத்தல், இளவட்டக் கல் போன்ற விளையாட்டுகள்
இவ்வகைப்பாட்டில் அடங்கும்.
உறியடி
உறியடி     விளையாட்டில் ஆடவரின் உடல்திறன் எவ்வாறு
வெளிப்படுகிறது என்று காண்போம். வைணவக் கோயில்
திருவிழாக்களில் உறியடித்தல் என்னும் சடங்கு, வழிபாட்டின் ஓர்
அங்கமாக நிகழ்த்தப்பட்டு வருகின்றது. ஆயர் பாடியில் கண்ணன்
வெண்ணெய் திருடி விளையாடியதை நினைவு கூரும் வகையில்
உறியடித்தல் சடங்கு நடத்தப் படுவதாகக் கூறப்படுகிறது.
    வடிவில் மூங்கில் கழிகள் நடப்பட்டிருக்கும். கழியின்
மையப் பகுதியில் ஓர் உருளையும் அதன்வழி ஒரு கயிறும்
தொங்கவிடப்பட்டிருக்கும். கயிற்றின் ஒரு முனையில் ஒரு மண்
பானையைக்கட்டி,மறு நுனியை ஒருவர் பிடித்துக் கொள்வார். அந்தப்
பானையினுள் வண்ணக் கலவை நீர் நிரப்பப் பட்டிருக்கும்.
இப்பொழுது அந்தப் பானையைக் கம்பு கொண்டு அடித்து
உடைக்க வேண்டும்.இது எளிதான செயல்தானே என்ற எண்ணம்
உங்கள் மனதில் தோன்றும். அது அவ்வளவு எளிதான செயலன்று.
ஏனென்றால் பானையை உடைக்க முன்வருபவர் கண்ணைக் கட்டிக்
கொள்ள வேண்டும். கண்ணைக் கட்டி இரண்டு மூன்று முறை
அவரைச் சுற்றி விட்ட பின்பே கையில் கம்பைக் கொடுத்து
அனுப்புவர். இந்நிலையில் அவர் எந்தத் திசையில் நிற்கின்றார் என்று
அவருக்கே தெரியாது.
கண்ணைக்     கட்டிக் காட்டில் விட்டது போல என்று கூறுவார்களே
அந்த நிலைதான் அவருக்கு. அந்த நிலையையும் தாண்டி அவர்
பானை அருகில் வந்துவிட்டால் பானை மேலும் கீழும் இழுத்து
விடப்படும். இந்தத் தடைகளை எல்லாம் மீறி அவர் பானையை
உடைத்து வெற்றி பெற வேண்டும். வேறு சில இடங்களில் கண்ணைக்
கட்டாமல் ஒரு காலை மட்டும் மடக்கிக் கட்டி நொண்டியடித்துக்
கொண்டே பானையை உடைக்க வேண்டும். பானையை உடைக்க
விடாமல் சுற்றியிருப்போர் அவர் மீது மஞ்சள் நீரை ஊற்றுவர்.
இதுபோன்ற தடைகளை எல்லாம் மீறிப் பானையை உடைப்பவருக்குப்
பாராட்டுகளும் பரிசுகளும் வழங்கப்படும். உறியடி விளையாட்டின்
போது ஊரே திரண்டுவிடும். உற்சாகம் கரை புரண்டோடும்.
5.4.2 வீர விளையாட்டு
காதலும்     வீரமும் தமிழர் வாழ்வின் அடிப்படை. மல்லராகவும்
மறப்பண்பு உடையோராகவும் வீரப் பற்று மிக்கோராகவும் தமிழர்கள்
விளங்கியதைத் தமிழ் இலக்கியங்கள் எடுத்துக்காட்டும். இத்தகைய
மறப்பண்பை வளர்த்தெடுக்கும் வகையிலேயே இன்றும் வீர
விளையாட்டுகள் மரபாகவும், பண்பாட்டுச் செயல்பாடாகவும் நிகழ்த்தப்
பட்டுவருகின்றன.
சல்லிக் கட்டு
நாட்டுப்புற     மரபில் வீர விளையாட்டாகக் கருதிப் போற்றப்படுவது
சல்லிக் கட்டு்
ஆகும். தமிழர் திருநாளாம் தைத்திருநாளின் ஓர்
அங்கமாக ஊர்கள் தோறும் சல்லிக் கட்டு வெகு விமரிசையாக நடத்தப்
படுவதுண்டு.எருது கட்டு, மஞ்சு விரட்டு, ஏறு தழுவுதல்,மாடு
பிடித்தல்
என்று பல பெயர்களில் வழங்கப் பெறும்
இவ்விளையாட்டினைப் பார்ப்போம்.
முரட்டுக்     காளைகளை விரட்டிப் பிடித்து வீரத்தை வெளிப்படுத்தும்
போட்டி விளையாட்டாக, சல்லிக் கட்டு நிகழ்த்தப் படுகின்றது. சல்லிக்
கட்டில் பயன்படுத்துவதற்கு என்றே காளைகள் வளர்க்கப்பட்டு,
அவற்றிற்குப் பயிற்சி அளிக்கப் படுகின்றது. இவ்வாறு பயிற்சி பெற்ற
காளைகள் சல்லிக் கட்டு நடைபெறும் இடங்களுக்கு அழைத்து
வரப்பட்டு, போட்டிக்கு விடப்படுகின்றன. காளைகள் வாடி வாசல்என்ற பகுதியிலிருந்து வெளிக்கிளம்பி எதிர்ப்பட்டோரை எல்லாம்
முட்டித் தள்ளியும் மிதித்தும் ஓடிவரும்.
காளைகளின்     போக்கை அறிந்த, காளைகளைப் பிடிக்கப் பயிற்சி
பெற்ற, காளைகளின் சாகசம் அறிந்த இளைஞர்கள் சீறிவரும்
காளைகளின் மீது துணிச்சலாகப் பாய்ந்து திமிலை இறுகப் பற்றியோ,
கொம்பைப் பிடித்து மடக்கியோ அடக்குவர். அனுபவமில்லாத சிலர்
காளைகளால்     காயப்படுவதுமுண்டு.     காளைகளைப் பிடித்து
அடக்கியோருக்குப் பலவிதமான பரிசுகள் வழங்கப் பெறும்.
 
 
நிறையிருந்தால் பாராட்டுங்கள்.. குறையிருந்தால் குறிப்பிட்டுச் சொல்ல உங்களைத் தவிர யார் இருக்கமுடியும்? தயவுசெய்து தங்களின் மேலான கருத்துக்களை இங்கு பகிர்ந்து கொள்ளவும்.
                                                                                                                                    கமருதீன்
                                                                  

1 comment:

Unknown said...

hai my dear very well and invention of old things beautiful

முக்கிய செய்திகள் – Google செய்திகள்

வெற்றியின் ரகசியம்...

வெற்றியின் ரகசியம்...... என் நேரமும் அதைப்பற்றியசிந்தனையும், அதர்க்கேற்ற உழைப்பும்,................... அன்பு கமருதீன்